திமுக தந்த நெருக்கடியால் நெல்லையில் அதிருப்தி வேட்பாளரை அறிவித்த காங்கிரஸ்? விளவங்கோடு பஞ்சாயத்துக்கும் முற்றுப்புள்ளி!!
திருநெல்வேலி உள்ளிட்ட தொகுதிகளில் திமுக கூட்டணியின் தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். இதனால் திருநெல்வேலி வேட்பாளரை அறிவிக்க வேண்டிய நெருக்கடியில் சிக்கியது காங்கிரஸ்.
இதனையடுத்து திருநெல்வேலி லோக்சபா தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர் ராபர்ட் புரூஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளராக டாக்டர் தாரகை கத்பர்ட் அறிவிக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி லோக்சபா தொகுதியில் அதிமுக கூட்டணியில் அதிமுக வேட்பாளராக சிம்லா முத்துச் சோழன் முதலில் அறிவிக்கப்பட்டார். ஆனால் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்டவர் சிம்லா முத்துச் சோழன் என்கிற விமர்சனங்கள் எழுந்ததால் அவர் மாற்றப்பட்டு ஜான்சி ராணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
பாஜக கூட்டணியில் பாஜகவின் நயினார் நாகேந்திரன் வேட்பாளராக களம் காண்கிறார். நயினார் நாகேந்திரன், முதலில் தூத்துக்குடி வேட்பாளர் என அறிவிக்கப்பட்டு பின்னர் நெல்லை பாஜக வேட்பாளராக மாற்றப்பட்டார்.
தற்போது காங்கிரஸிலும் நீண்ட இழுபறிப்புக்குப் பின்னர் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வழக்கறிஞர் ராபர்ட் புரூஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.