தமிழக ஆளுநர் ஆர்என் ரவிக்கு தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் திமுக பொறுப்பேற்ற பிறகு தமிழக ஆளுநராக ஆர்என் ரவி நியமிக்கப்பட்டார். அப்போது, அவருக்கும், தமிழக அரசுக்கும் தொடர்ந்து மோதல் போக்கே இருந்து வருகிறது. நீட் விலக்கு மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களை குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்காமல் இருந்து மேலும் விரிசலை ஏற்படுத்தியது. இதனால், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளுநருக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து கூறி வருகின்றன.
இந்த நிலையில், ஆளுநரைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் சைதாப்பேட்டை ராஜீவ் காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், ஆளுநருக்கு கடும் எச்சரிக்கைகளை விடுத்தார்.
அவர் பேசியதாவது :- ஆளுநர் என்று சொல்லாமல் வெறும் ரவி என்றே கூறலாம், அவருக்கு மரியாதை தர வேண்டிய அவசியம் கிடையாது. ரவி இதற்கு முன்பு பணிசெய்த நாகலாந்தில் பாம்பு கறி, நாய் கறி சாப்பிடுவார்கள். ஆனால் தமிழ்நாட்டில் இருப்பவர்கள் நெல் அரிசி, சோறு சாப்பிடுபவர்கள். கொஞ்சம் உரசினாலும் தீ பற்றிக்கொள்ளும்.
இப்போது கூட செல்வப்பெருந்தகையிடம் சட்டமன்றத்தில் ஜெயலலிதா பற்றி கூறும்போது கோமளவல்லி என குறிப்பிட்டு பேசியிருக்கலாம் என கூறினேன். அமித்ஷா பேச்சைக் கேட்டுக் கொண்டு ரவி எருமை மாடு போல அசைவற்று இருக்கிறார். தமிழர்கள் நாகரிகமாக இருக்கிறார்கள் என்று ரவி நினைக்கிறார்.
தமிழர்களைப் பற்றி தெரிந்துகொள்ள டெல்லியில் பழைய தலைவர்களை கேட்டுப்பாருங்கள். தேவைப்பட்டால் தமிழர்கற் அநாகரீகமாகவும் நடந்து கொள்வார்கள். தமிழக மக்கள் நினைத்தால் ஒரு நிமிடத்தில் ரவி தூக்கி எறியப்படுவார். தபால்காரன் வேலையை செய்பவர்தான் ஆளுநர் ரவி, ரவி வீடு போய் சேர வேண்டிய நேரம் வந்துவிட்டது. ரவியை ஒழிக்க நினைத்தால் அதை விரைந்து செய்ய முடியும், ஆனால் ஸ்டாலின் ஆட்சிக்கு கெட்ட பெயர் வந்து விடக்கூடாது என்பதால் பொறுமையாக இருக்கிறோம்.
ரவி அவர்களே குழந்தை குடும்பத்தோடு இருக்கிறீர்கள், ஒருவாரத்திற்குள் நீட் மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்ப வில்லை என்றால் காங்கிரஸ் போராட்டம் தீவிரமாகும். ரவி உங்களை ரயிலில் டெல்லி அனுப்பி வைத்து விடுவோம், எனக் கூறினார்.
டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதன் மூலம் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 400 கோடி ரூபாயை வாரி…
தென்னிந்தியாவின் டாப் நடிகை நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். இவரது…
கோவை மாவட்டம் சூலூர் அருகே மாட்டு கொட்டகையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறில், இளம்பெண்ணை ராஜேந்திரன் என்பவர் அரிவாளால் வெட்டி…
வடிவேலுவின் கம்பேக் 2011 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் வடிவேலு. அந்த சமயத்தில் திமுகவை எதிர்த்து…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட தென்குவளவேலி என்ற பகுதியைச் சேர்ந்த சங்கர் வயது 45. இவர் கூலி வேலை செய்து…
This website uses cookies.