தி.மு.க.வும் காங்கிரசும் கூட்டணி கட்சிகளாக இருந்தாலும் அவ்வப்போது இரு கட்சிகள் இடையேயும் உரசல் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் இப்போது சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி ப.சிதம்பரத்துக்கும், பெரம்பலூர் தொகுதி தி.மு.க. எம்.பி. அருண்நேருவுக்கும் இடையே வார்த்தை போர் முற்றி உள்ளது.
சென்னையை போல் திருச்சியிலும் மெட்ரோ ரெயில் சேவையை கொண்டு செல்வதற்காக ஆய்வு பணி நடைபெற்றது. இதற்கு ரூ.11 ஆயிரம் கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த திட்டம் குறித்து கார்த்தி ப.சிதம்பரம் தனது வலைதள பதிவில் விமர்சனம் செய்தார். அதில், “திருச்சிக்கு இப்போது இந்த திட்டம் தேவையா? தேவையில்லாத இதுபோன்ற திட்டங்களை கைவிட்டு நல்ல சாலை வசதிகளை செய்ய அரசு கவனம் செலுத்த வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்து அமைச்சர் நேருவின் மகன் அருண்நேரு எம்.பி. வெளியிட்டுள்ள பதிவில், கார்த்தி, நான் பெரம்பலூர் தொகுதி எம்.பி. இதில் அடங்கி உள்ள 4 சட்டமன்ற தொகுதிகள் திருச்சியில் வருகின்றன. இந்த திட்டத்தை மக்கள் வரவேற்கிறார்கள். திருச்சி வளர்ந்து வரும் நகரம் என்பதை நீங்கள் அறியவில்லையா?
வரும் காலத்தில் மக்கள் அரசு அலுவலங்கள் உள்பட பல பகுதிகளுக்கும் செல்வதற்கு மெட்ரோ ரெயில் கை கொடுக்கும். எனவே தேவையற்று பேசுவதை நிறுத்துவது நல்லது” என்று பதிலடி கொடுத்துள்ளார்.
இதற்கிடையில் அருண்நேருவின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூரும் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த வார்த்தைப் போர் இரு கட்சிகளுக்கு இடையேயும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.