ராகுலை பார்த்து பிரதமர் மோடிக்கு பயம்… ஆச்சர்யப்படுவதுதற்கு ஒன்றுமில்லை ; செல்வப்பெருந்தகை..!!

ராகுல்காந்தியோடு நேருக்கு நேர் விவாதிக்க பிரதமர் மோடி அஞ்சி பின்வாங்குவதில் வியப்பொன்றும் இல்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- ஓய்வு பெற்ற நீதிபதிகள் மதன் பி. லோகூர், அஜித் பி. ஷா மற்றும் மூத்த பத்திரிக்கையாளர் என். ராம் ஆகியோர் நாடாளுமன்றத் தேர்தலின் முக்கிய பிரச்சினைகள் குறித்து பொது தளத்தில் விவாதம் நடத்த பிரதமர் மோடிக்கும், ராகுல்காந்திக்கும் அழைப்பு விடுத்து கடிதம் எழுதினர். இந்த கடிதம் கிடைத்தவுடனே அழைப்பை ஏற்றுக் கொண்ட ராகுல்காந்தி, பிரதமர் மோடியுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த தயார் என நேற்று முன்தினம் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்தார். இந்நிலையில் இதுவரை பிரதமர் நரேந்திர மோடியிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. அத்தகைய விவாதத்தை நடத்துவதற்கு நரேந்திர மோடிக்கு துணிவில்லை என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மடியில் கனம் இருப்பதால் ராகுல்காந்தியுடன் விவாதிக்க நரேந்திர மோடி தயாராக இல்லை.

நரேந்திர மோடியை பொறுத்தவரை முதல்-அமைச்சராக இருந்த 11 ஆண்டு காலத்தில் சட்டமன்றத்திலோ, பிரதமராக பதவி வகித்த 10 ஆண்டுகளில் நாடாளுமன்ற எத்தகைய விவாதங்களிலும் அவர் பங்கேற்று கருத்து மோதல்களுக்கு தன்னை உட்படுத்திக் கொண்டதில்லை. பிரதமர் மோடி பேசுவார், அதனை மற்ற உறுப்பினர்கள் கேட்க வேண்டும். எந்த கேள்விக்கும் நாடாளுமன்றத்தில் அவர் பதில் சொல்லியதில்லை. பிரதமர் பதவி வகித்த 10 ஆண்டு காலத்தில் ஒருமுறை கூட பத்திரிகையாளர்களை சந்தித்ததில்லை. ஏனெனில் பத்திரிகையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்கிற துணிவை அவர் பெற்றிருக்கவில்லை. அதற்கு காரணம் அவரது அரசியல் பின்னணி தான். இந்நிலையில் இருக்கும் நரேந்திர மோடி நாள்தோறும் ராகுல்காந்தியை இளவரசர் என்று திரும்பத் திரும்ப குறிப்பிட்டு பேசுகிறார். இந்தியாவில் மன்னராட்சியை ஒழித்த இந்திரா காந்தியின் பேரப் பிள்ளையாக இருக்கிற ராகுல்காந்தியை பார்த்து இளவரசர் என்று மோடி அழைப்பது மிகுந்த கேலிக்குரியது.

மேலும் படிக்க: அதிமுகவை உடைக்க பாஜக சதியா…? தேர்தல் முடிவுக்கு பிறகு அதிமுகவில் பிளவா…? அமைச்சரால் வெடித்த சர்ச்சை!

உள்துறை மந்திரி அமித்ஷா, ராகுல்காந்தியை பார்த்து கேள்வி கேட்கிறார். கோத்ரா ரெயில் எரிப்புக்கு பிறகு 2002-ல் குஜராத் மாநில உள்துறை மந்திரியாக இருந்த அமித்ஷா கலவரத்திற்கு காரணமானவர் என்று குற்றம்சாட்டப்பட்டு, சுப்ரீம் கோர்ட்டு ஆணைப்படி அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர். பிறகு நிபந்தனை ஜாமீனில் விடுதலையாகி, மும்பையில் தங்கி, நாள்தோறும் காவல்துறையின் முன் கையெழுத்து போட்டவர் தான் அமித்ஷா. இத்தகைய பின்னணி கொண்டவர் ராகுல்காந்தியிடம் கேள்வி எழுப்ப என்ன உரிமை இருக்கிறது ? தமது வாழ்நாள் முழுவதும் மதநல்லிணக்கத்திற்காகவும், மக்களை ஒன்றுபடுத்துவற்காகவும் இரண்டு முறை இந்திய ஒற்றுமை பயணம் நடத்தியவர் ராகுல்காந்தி.

காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டதும், முஸ்லிம் லீக்கின் தேர்தல் அறிக்கை போல் இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் மீது மதச்சாயம் பூசியவர் நரேந்திர மோடி. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் முஸ்லிம் என்ற ஒரு வார்த்தை எங்கேயும் இடம்பெறவில்லை. அதேபோல, நீண்ட நெடுங்காலமாக இங்கு வாழ்ந்து வருகிற சிறுபான்மையினரை ஊடுருவல்காரர்கள் என்று சொன்னவர் மோடி. நீண்ட நெடுங்காலமாக இந்தியாவில் வாழ்ந்து வருகிற 20 கோடி இஸ்லாமியர்களுக்கு எதிராக அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியவர் பிரதமர் மோடி.

கடந்த 2019 மக்களவை தேர்தலுக்கு முன்பாக ராணுவ வீரர்களை நெடுஞ்சாலை வழியாக வாகனத்தில் அழைத்துச் செல்ல வேண்டாம். அவர்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. எனவே, ஹெலிகாப்டர்கள் மூலம் அழைத்துச் செல்லுங்கள் என்று அன்று ஜம்மு காஷ்மீர் மாநில கவர்னராக இருந்த சத்தியபால் மாலிக் கூறிய அறிவுரையை புறக்கணித்தனால் 22 ராணுவ வீரர்கள் புல்வாமா தாக்குதலில் பலியானதற்கு காரணமாக இருந்தவர் யார் என்பதை இந்த நாடு அறியும். இந்த குற்றச்சாட்டை அதே கவர்னர் மீண்டும் கூறிய போது, பிரதமர் மோடி இதுவரை அதற்கு பதில் கூறாதது ஏன்? அந்த தாக்குதலை பயன்படுத்தி 2019 தேர்தலில் அரசியல் ஆதாயம் தேடியதைப் போல, 2024 தேர்தலில் ராமர் கோவில் பிரச்சினையை எழுப்பி, மக்களை திசைத் திருப்பி விடலாம் என்று மோடி கனவு காண்கிறார்.

ஆனால், விலைவாசி உயர்வு, வரலாறு காணாத வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை மறுப்பு, பணமதிப்பு நீக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்பு, கொரோனா தொற்றினால் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழப்பு, பொருளாதார பாதிப்பு, மோடியின் சலுகையினால் அதானி, அம்பானி சொத்து குவிப்பு, ஏழை, எளியவர்களின் வாழ்வாதாரம் இழப்பு, மாநில உரிமைகள் பறிப்பு போன்ற நடவடிக்கைகள் காரணமாக நரேந்திர மோடி திரும்ப ஆட்சிக்கு வருவதற்கான கடுகளவு வாய்ப்பும் இல்லை என்று அறிவார்ந்த அரசியல் வல்லுநர்களும், பாரபட்சமற்ற தேர்தல் கணிப்பாளர்களும் நாள்தோறும் கருத்துகளை கூறி வருகிறார்கள். இதனால் பதற்றமும், அச்சமும் அடைந்த பிரதமர் மோடியும், பா.ஜ.க.வினரும் மதரீதியாக மக்களை பிளவுபடுத்தி, அச்சுறுத்தி வெற்றி பெற்று விடலாம் என்கிற கனவை நாளுக்கு நாள் ராகுல்காந்தி தகர்த்து வருகிறார்.

இதன்மூலம் தேர்தலுக்கு பிறகு இந்தியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதி என்கிற நம்பிக்கை நாளுக்கு நாள் வலிமை பெற்று வருகிறது. இந்தியாவின் எதிர்காலம் ஒளிமயமாக அமைய இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது உறுதியாகி இருக்கிறது. இந்த பின்னணியில் தான் ராகுல்காந்தியோடு நேருக்கு நேர் விவாதிக்க பிரதமர் மோடி அஞ்சி பின்வாங்குவதில் வியப்பொன்றும் இல்லை, என தெரிவித்துள்ளார்.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

இறந்த பின்பும் இப்படியா..மனோஜ் சவப்பெட்டி மீது நடந்த மோசமான செயல்..பிரபலம் காட்டம்.!

நடிகரும் இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக காலமானார்.இந்த செய்தி திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியைக்…

40 minutes ago

மாமே சவுண்ட் ஏத்து..தெறிக்க விடும் அனிருத்..’குட் பேட் அக்லி’ படத்தின் முக்கிய அப்டேட்.!

பாடல் ப்ரோமோ வெளியீடு! நடிகர் அஜித் குமார் நடிப்பில்,இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம்…

1 hour ago

வாய்ப்பு தாறோம் வாங்க..கமல் பெயரில் மோசடி..எச்சரிக்கை விடுத்த நிறுவனம்.!

கமல் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை.! நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம்,தங்களுடைய நிறுவன பெயரை தவறாக பயன்படுத்தி…

2 hours ago

உதயநிதிக்கு ஜால்ரா போடவா? கடுப்பான Ex அமைச்சர்.. மதுரையில் பரபரப்பு பேச்சு!

திமுக எம்எல்ஏக்களைப் போல் உதயநிதிக்கு ஜால்ரா போட மக்கள் எங்களை தேர்ந்தெடுக்கவில்லை என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மதுரை: மதுரை புறநகர்…

3 hours ago

பதில் சொல்லுங்க.. பதறி ஓடிய அமைச்சர்.. சட்டென முடிந்த திமுக ஆர்ப்பாட்டம்!

திமுகவின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப் போவதில்லை என பகிரங்கமாக கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.…

3 hours ago

இறங்கி அடித்த சியான் விக்ரம்…அசுர வசூலில் ‘வீர தீர சூரன்’.!

விக்ரம் முரட்டு கம்பேக் நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் தொடர்பான தகவல்…

4 hours ago

This website uses cookies.