சென்னை ; காசோலை மோசடி வழக்கில் மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் மகன், பேரனுக்கு சைதாப்பேட்டை கோர்ட்டு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன்களில் ஒருவர் ராம்குமார். இவரது மகன் துஷ்யந்த் மற்றும் அவரது மனைவி அபிராமி ஆகியோர் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றனர். இவர்களது நிறுவனம், மயிலாப்பூரைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துடன் தொழில் ரீதியாக தொடர்பு வைத்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு வியாபார நடவடிக்கைக்காக ரூ.15 லட்சத்திற்கான 2 காசோலையை துஷ்யந்த் கொடுத்ததாகவும், ஆனால் வங்கியில் பணம் இல்லாததால் காசோலைகள் இரண்டும் திரும்பி வந்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இதனால், அதிர்ச்சியடைந்த மயிலாப்பூரைச் சேர்ந்த தனியார் நிறுவனம், வேண்டுமென்றே காசோலை அளித்து ஏமாற்றி உள்ளதாகக் கூறி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மேலும், இந்த பணத்திற்கு ராம்குமார் தரப்பில் உத்தரவாதம் தரப்பட்டது. எனவே அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தனர்.
ஆனால், உத்தரவாதப்படி பணம் கொடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த் அவரது மனைவி அபிராமி, தந்தை ராம்குமார் ஆகியோருக்கு எதிராக ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்ட்டை நீதிபதிகள் பிறப்பித்தனர். இதனை தொடர்ந்து இந்த வழக்கின் பிப்ரவரி மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.