பிரதமர் மோடியின் தாயார் ஹீரப்பெண் மோடி இன்று காலமானார்.
இன்று பிரதமர் மோடி காரில் தாயார் ஹீராபென் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட போது எப்போதும் பின்பற்றப்படும் ப்ரோடோகால் முறைகள் பின்பற்றப்படவில்லை. பொதுவாக பிரதமர் மோடி ஒரு இடத்திற்கு செல்கிறார் என்றால், அவரை சுற்றி எஸ்பிஜி அதிகாரிகள் இருப்பார்கள். அதோடு closed contact பாதுகாப்பு குழு ஒன்றும் இருக்கும். இவர்கள் மட்டுமே மோடியை நெருங்க முடியும். மற்ற யாரும் மோடியை நெருங்க முடியாது. மோடியை சந்திக்கும் பெரிய தலைவர்கள் மட்டுமே பிரதமருக்கு அருகில் அனுமதிக்கப்படுவார்கள்.
இன்று முதலில் ஆம்புலன்சில் தனது தாயாரின் உடலனுடன் பிரதமர் மோடி தனியாகவே சென்றார். அதன்பின்தான் எஸ்பிஜி அதிகாரிகள் சில மீட்டர்களுக்கு பின் ஆம்புலன்ஸ் உள்ளே ஏறினார்கள். முதலில் பிரதமர் மோடி ஆம்புலன்சில் தனியாக செல்வதாகவே இருந்தது. எஸ்பிஜி அதிகாரிகள் ஆம்புலன்ஸ் பின் பக்கம் தொற்றிக்கொள்வதாக இருந்தது. ஆனால் பாதுகாப்பு கருதி கடைசியில் அதிகாரிகள் உள்ளே அமர்ந்து கொண்டனர். இந்த பயணம் முழுக்க மோடி கைகூப்பி வணங்கியபடி காணப்பட்டார். தனது தாயாரை கை கூப்பி வணங்கியபடி மோடி இருந்தார்.
பிரதமர் மோடி தாயாரின் உடலுக்கு அதன்பின் தகன மேடையால் இறுதி மரியாதையை செய்தார். கடைசியாக உடலை சுற்றி வந்தார். அப்போது பிரதமர் மோடி உடைந்து கண்ணீர்விட்டார். இதையடுத்து ஹீராபென்னின் உடல் தகனம் செய்யப்பட்டது.
இன்று பிரதமர் மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இன்று பிரதமர் மோடி கொல்கத்தா செல்வதாக இருந்தது. வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைக்க அவர் கொல்கத்தா செல்வதாக இருந்தது. ஆனால் தற்போது அவர் ஆன்லைன் வழியாக குஜராத்தில் இருந்தே இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
இது குறித்து பிரதமரின் ட்விட்டர் பக்கத்தில் மேற்குவங்கம் மாநிலத்தில் தொடங்க இருக்கும் அரசு நிகழ்ச்சிகள் வழக்கம் போல தொடரும் என்றும், பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டது.
அதன் படி காபொலி காட்சி மூலம் பிரதமர் மோடி, நாடடின் நாட்டின் 7-வது வந்தே பாரத் ரெயில் சேவையை நாட்டு மக்களுக்கு அற்பணித்தார்.
இந்த நிலையில் பிரதமர் மோடியின் தேசபக்தியை கண்டு வியந்த அண்ணாமலை, முதலில் தேசம் பின்னர்தான் பர்ஷனல் என பதிவிட்டு, MY PM, MY PRIDE என பதிவிட்டுள்ளார்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.