தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் ஐபிஎல் தொடரில் அபாரமாக பந்து வீசி இந்திய அணியில் இடம் பிடித்தார்இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் துல்லியமாக பந்து வீசி மேக்ஸ்வெல் டிவிலியர்ஸ் போன்றோரையும் திணறடித்தார்.
காலில் ஏற்பட்ட காயத்தால் ஐபிஎல் 14வது தொடரில் இவர் பங்கேற்கவில்லை
சமீபத்தில் நடைபெற்ற கல்லூரி விழா ஒன்றில் பேசிய நடராஜன் ஐபிஎல்லில் பஞ்சாப் அணிக்கு நான் முதன் முதலில் செல்லும்போது தமிழ் தவிர எனக்கு எதுவும் தெரியாது. அங்கு முழுவதுமாக ஹிந்திதான். மிகவும் கஷ்டமாக இருந்தது. ஒரு மாதிரி தனியாக இருப்பதைப்போல் உணர்ந்தேன். அதனால் தொடக்கத்தில் மிகவும் கஷ்டப்பட்டேன். ஆனால் எனக்கு விளையாட்டு ரொம்பப் பிடிக்கும் என்பதால் கஷ்டங்களைத் தாண்டி விளையாடுவேன் என்று பேசினார்.அவரது ஹிந்தி பற்றிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்திய அணியில் இவருக்கான சிறப்பான இடம் வழங்கப்படவில்லை என்பது போன்ற தகவல்கள் பரவி வந்தது.இதைக் குறித்த கேள்விக்கு பதில் அளித்த கிரிக்கெட் வீரர் நடராஜன் எனக்கு ஏற்பட்ட சில காயங்களால் என்னால் அணியில் விளையாட முடியவில்லை, எனக்கான வாய்ப்பு பிசிசிஐ ஆல் மறுக்கப்பட்டது எனச் சொல்வது தவறானது என்றார். மேலும் ஹிந்தி பற்றிய அவரின் பேச்சு குறித்து கேட்ட போது என்னுடைய வாழ்வில் நான் கடந்து வந்த பாதையைப் பற்றி மட்டுமே பேசினேன் என்று பதில் அளித்தார்.
டாப் நடிகரிடமே இப்படியா? அஜித்குமார் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் என்பதையும் அவரை வைக்க படம் இயக்க பல இயக்குனர்கள்…
சாக்லேட் பாய் ஸ்ரீகாந்த் நடிக்க வந்த புதிதில் சாக்லேட் பாய் ஆக பல திரைப்படங்களில் வலம் வந்தார். ஆனால் ஒரு…
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்கு போக வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தவர் நடிகர் ஸ்ரீ. வழக்கு எண்…
புதுமை இயக்குனர் பா.ரஞ்சித் திரைப்படங்கள் வெளிவரும்போதெல்லாம் அதனுடன் சேர்ந்து பல சர்ச்சைகளும் கிளம்புவது வழக்கம். தமிழ் சினிமாவில் சமூக ஏற்றத்தாழ்வுகளையும்…
தனது காதலியை பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் சூட்கேஸில் மறைத்து வைத்து அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹரியானா மாநிலம்…
This website uses cookies.