முந்திரி தொழிலாளியை அடித்து கொன்றது தான் திமுக எம்பியின் சாதனை என்றும், திமுகவினர் இங்கு போட்டியிடுவதற்கு அறுகதையற்றவர்கள் என கடலூரில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கடலூர் முதுநகர் பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடலூர் பாராளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தங்கர்பச்சானை ஆதரித்து பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை திறந்த வேனில் இருந்து வாக்கு சேகரித்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழக அளவில் பாரதிய ஜனதாவின் வாக்குறுதிகள், பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் கொடுக்கும் வாக்குறுதி என அனைத்தும் ஏப்ரல் முதல் வாரம் எட்டாம் தேதிக்குள் வெளியிடப்படும். கடலூரில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் தங்கர் பச்சான் ஒரு பாட்டாளியுடைய வாழ்க்கையை அற்புதமாக சொல்லக்கூடிய மனிதர். அவரது படங்கள் அனைத்தும் காவியங்களாக எடுத்துள்ளார்.
இதுபோன்று தனித்துவமான வேட்பாளர்களை பாட்டாளி மக்கள் கட்சி நிறுத்தி உள்ளது. திமுக போல் அப்பாக்கள் மந்திரிகளாக இருந்து மகன்களை தேர்தலில் நிற்க வைக்கின்றனர். அது போல இங்கு இல்லை. கடலூரின் முன்னாள் எம்பி ஒரு பாட்டாளியை அடித்து கொலை செய்ததுதான் அவரின் சாதனை. அதனால் திமுக தெளிவாக அவர்கள் நிற்காமல், கூட்டணி கட்சிக்கு சீட்டு ஒதுக்கி உள்ளனர்.
பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று அவரின் குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்கும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ் போன்ற கட்சிகள் முன்கூட்டியே விண்ணப்பித்ததினால் அவர்களுக்கு சின்னம் வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல் சின்னம் விவகாரத்தில் யாருக்கும் எந்தவித அநியாயமும் நடக்கவில்லை.
கடலூர் பாராளுமன்ற தொகுதியில் பாமக தலைவர் அன்புமணியின் மைத்துனர் காங்கிரஸ் கட்சி சார்பில் கடலூரில் போட்டியிடுகிறார். பாமக கட்சி சார்பில் தங்கர்பச்சான் போட்டியிடுகிறார். இதனால்தான் இது சுவாரசியமான களமாக உள்ளது. அரசியல் என்று வந்துவிட்டால் அண்ணன், தம்பி, மாமன், மச்சான் போன்ற எந்த உறவு முறையும் பார்ப்பதில்லை.
எனது சொத்து கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் 117 மடங்கு உயர்ந்திருப்பதை காண்பித்தால் அரசியலை விட்டு விலகுகிறேன். நேர்மையான அரசியலை நான் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறேன். கோயம்புத்தூரில் நிச்சயம் மக்கள் எனக்கு ஆதரவளிப்பார்கள், என தெரிவித்தார்.
சென்னையில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜகவினரும், எதிராக திமுகவினரும் ஒரே இடத்தில் கோஷமிட்டதால் பரபரப்பு நிலவியது. சென்னை: சென்னை, கோயம்பேட்டில்…
பிரம்மாண்டமாக தொடங்கிய மூக்குத்தி அம்மன் 2 நடிகை நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் "மூக்குத்தி அம்மன் 2" திரைப்படத்தின் பூஜை…
தமிழகத்தில் பல ஆண்டுகளாக இருமொழிக் கொள்கை அமலில் உள்ளது. தற்போது மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என…
இது என்னுடைய கஷ்ட காலம்.! நடிகர் நீல் நிதின் முகேஷ் ஒரு திறமையான நடிகராக இருந்தாலும்,தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை…
சென்னையில், தந்தையைக் கொலை செய்துவிட்டு தப்பிய மகன் மற்றும் தாயை ஆட்டோ ஓட்டுநர் காவல் நிலையம் அழைத்துச் சென்றது தொடர்பாக…
துள்ளுவதோ இளமை படம் மூலம் தான் நடிகர் தனுஷ் நடிகராக அறிமுகமானார். அந்த படத்தில் ஏராளமானோர் அறிமுக நடிகர்களாக இணைந்தனர்.…
This website uses cookies.