கடலூர் : மாணவர்கள் போராட்டம் காரணமாக கடலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை கடந்தாண்டில் தமிழக அரசு ஏற்றது. இந்நிலையில் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் அரசு கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் ஆண்டு முதல் இறுதி ஆண்டு வரை பயிலும் மாணவர்களுக்கு தனியார் கல்லூரிகளுக்கு நிகராக கல்விக்கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் கூறி கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
காலவரையற்ற போராட்டம் நடத்தி வரும் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி வருகின்றனர். இரவு பகலாக போராட்டம் தொடர்கிறது.
15வது நாளாக முட்டி போட்டு முகத்தில் பெயின்ட் அடித்து முகம் ஓவியம் வரைந்து தமிழக அரசுக்கு கவனத்தை கவரும் வகையில் போராட்டம் நடைபெற்றது.
கல்வி கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் கடலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், கடலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முதலாமாண்டு மற்றும் பயிற்சி மருத்துவர்களை தவிர பிறருக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
ரசிகரின் கமெண்ட்க்கு ஜோதிகா பதிலடி நடிகர் சூர்யா கங்குவா பட தோல்விக்கு பிறகு தன்னுடைய அடுத்தடுத்து படங்களில் மிகவும் பிஸியாக…
நடிகர் சிவக்குமாரின் இளைய மகனும், சூர்யாவின் சகோதரருமான நடிகர் கார்த்திக்கு கடந்த ரெண்டு படங்கள் கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான்…
திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக செயற்குழு, திமுக சார்பு அணிகளின் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம்…
நாதகவில் இருந்து விலகிய காளியம்மாள் எங்கு செல்கிறார் என்பது தனக்கு தெரியும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.…
சின்னத்திரையே, பெரியதிரையோ எதில் உள்ளே நுழைந்தாலும் வந்த உடனே உச்சத்தை தொடுவது அரிதிலும் மிக அரிது. அப்படி வந்த பிரபலங்கள்…
குட் பேட் அக்லி படத்தில் ஷாலினி நடித்துள்ளாரா தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் நடிகை ஷாலினி,அதன் பிறகு…
This website uses cookies.