ஓபிஎஸ் போல நாங்க பச்சோந்திகள் அல்ல… சசிகலா மீது கொலை பழி சுமத்தியவரும் அவருதான் : சிவி சண்முகம் அதிரடி

விழுப்புரம் : திமுகவை கண்டித்து இன்று நடைபெற்ற போராட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் காட்டமாக விமர்சித்து பேசினார்.

விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்தும் ஆன்லைன் ரம்மி விளையாட்டினை தடைசெய்ய வலியுறுத்தி அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சிவி சண்முகம் கூறியதாவது :- தேர்தல் நேரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை. நகைகடன் தள்ளுபடி செய்யப்படும் என ஸ்டாலின் அறிவித்து, தற்போது 15 லட்சம் பேருக்கு மட்டுமே நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கேஸ் சிலிண்டருக்கு மானியம் வழங்கப்படும். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை எதையும் செய்யவில்லை.

திமுக அரசுக்கு வாக்களித்த மக்களை கொச்சப்படுத்தி கேவலப்படுத்தி திமுக அரசு செயல்படுகிறது. பெண்களுக்கு தாலிக்கு தங்கம் திட்டத்தினை பறித்த அரசாகவும், அம்மா இருசக்கர வாகன திட்டத்தை நிறுத்தி, அம்மா உணவகத்தை முடக்கி ஏழை, எளிய மக்கள் முன்னேற முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்சியில் முடக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சியில் கட்டுமான பொருட்கள் விலைவாசி உயர்த்தபட்டுள்ளது. கொரோனோ காலத்திலும் விலைவாசியை கட்டுபாட்டுக்குள் வைத்திருந்தவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. ஆனால், திமுக ஆட்சிக்கு வரும்போது வரி வருவாய் கூடிய போதும் விலைவாசி மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் ஒரு டன் கம்பி 34 ஆயிரம் இருந்தது. தற்போது திமுக ஆட்சியில் ஒரு டன் கம்பி 84 ஆயிரம் உயர்ந்து சிமெண்ட் விலையும் அதிகரித்து உள்ளது.

திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் சிமெண்ட், கம்பி விலை உயர்ந்து விடுகிறது. தைரியம், மனமிருந்தால் சிமெண்ட் விலையை தமிழக முதல்வரால் குறைக்க முடியுமா..?. திமுக பினாமிகளால் தான் சிமெண்ட் ஆலைகள் நடத்தப்படுகிறது. திமுக ஆட்சியில் தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பு இல்லை என்பதால் நூறு நாள் வேலைவாய்ப்பில் வேலை செய்யும் பணி அதிகரித்துள்ளது. ஏழை மக்களின் பணத்தை திமுக அரசு கொள்ளை அடித்து வருகிறது.

ஏழை, எளிய மக்கள் பயன்படுத்துகிற அரிசி, பருப்பு, தானியம், பால் உள்ளிட்ட அனைத்து பொருட்களிலும் 5 சதவிகித வரி உயர்த்தப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பு ஆய்வு கூட்டத்தில் ஏன் 5 சதவிகித வரி விதிப்பிற்கு நிதி அமைச்சர் எதிர்க்கவில்லை. இது குறித்து ஏன் முதலமைச்சர் மத்திய அரசுக்கு அழுத்தம் தரவில்லை. தமிழகத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று தெரியாமல் கனவு உலகத்தில் தமிழக முதல்வர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. கருணாநிதிக்கு அவர்களிடத்தில் இருந்த நிர்வாக திறமை ஸ்டாலினிடம் இல்லை. ஆனால், கொள்ளை அடிக்கும் திறன் மட்டும் கருணாநிதியை போன்று உள்ளது.

வரி உயர்வு எல்லாத்துக்கும் மத்திய அரசை தமிழக அரசு குற்றஞ்சாட்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளது. இன்று வீட்டு உபயோக மின்சார கண்டன உயர்வை அறிவித்துள்ள தமிழக அரசு அடுத்து விவசாயிகள் பயன்படுத்தும் இலவச மின்சாரத்திற்கும் கட்டணம் செலுத்த சொல்வார்கள்.
மத்திய அரசை எதிர்க்கும் அரசாக திமுக அரசு இல்லை. டெல்லியில் இருக்கும் திமுக அமைச்சர்கள் தங்களை காப்பாத்தி கொள்ள தான் செயல்படுகிறது.

மிகப்பெரிய தவறை திமுக அரசு செய்துள்ளது. அதிமுக அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையை ஓ. பன்னீர் செல்வம் சூறையாடவில்லை. திமுகவினர் தான் சூறையாடியுள்ளனர். இவர்களுக்கு துணையாக காவலர்கள் இருந்தார்கள். ஓபிஎஸ் போல நாங்கள் பச்சோந்திகள் அல்ல. அதிமுகவில் ஒரு காலத்தில் ஒரு துரோகிகள் வருவார்கள். ஓபிஎஸ் பன்னீர்செல்வத்தை வைத்து அதிமுக இயக்கத்தை உடைக்கலாம். கலவரம் செய்யலாம் என ஸ்டாலின் நினைக்க வேண்டாம்.

தன்னுடைய சுயநலத்திற்காக எதையும் எப்போதும் ஓபிஎஸ் பலி கொடுக்க தயங்க மாட்டார். உள் கட்சி பிரச்சனையில் நல்ல எண்ணத்தில் துணை முதல்வராக ஆக்கப்பட்டார். ஓபி பன்னீர் செல்வத்திடம் இருந்து முதலமைச்சர் பதவி பறிக்கப்பட்ட பின் சசிகலா மீது கொலை பழி சுமத்தியவர் தான் அவர்.

ஸ்டாலின் தமிழகத்தில் பொறுப்பேற்றதில் இருந்து கூட்டு பாலியல் அதிகரித்துள்ளது. பள்ளி கல்வி துறை பாலியல் வன் கொடுமை துறையாக மாறியுள்ளது. தமிழகத்தில் வன்முறை பாலியல் வன்கொடுமை நடைபெறுவதற்கு காரணம் கஞ்சா, ஹெராயின், அபின் போன்றவைகள் சர்வசாதாரணமாக கிடைக்கிறது. மாணவர்கள் கஞ்சாவால் சீரழிந்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் ஏன் அமைச்சர்கள் சென்று மாணவியின் குடும்பத்தாரை சந்திக்கவில்லை. தமிழகத்தில் ஜாதி கலவரத்தை உருவாக்க ஸ்டாலின் முயற்சிக்கிறார். தினந்தோறும் காவல் பணியை செய்யாமல் நடைபயிற்சியை செய்யும் டிஜிபி தமிழகத்தில் செயல்படுகிறார். மேலும், ஒரே குடும்பம் தமிழகத்தை சூறையாடி கொண்டிருக்கின்றனர். தமிழகத்தின் காவல்துறையை நிர்வகிப்பது திமுக நிர்வாகிகள் தான். போதை பொருட்கள் அதிகரித்து நிர்வாக திறமையற்ற ஆள தகுதியில்லாத, அமைச்சர்களை கட்டுக்குள் வைத்துகொள்ளாத முதல்வர் ஸ்டாலின், என தெரிவித்துள்ளார்.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

60 வயது நடிகருடன் நடித்தேன்..சினிமா வாழ்க்கையை போச்சு..புலம்பும் சர்ச்சை நடிகை.!

60 வயது நடிகருடன் நான் இருந்தனா-கஸ்தூரி அதிர்ச்சி தகவல் தமிழ்,தெலுங்கு,மலையாள என பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம்…

4 hours ago

கேமியோ ரோலில் பிரபல தெலுங்கு நடிகர்..”ஜெயிலர் 2″ சம்பவம் லோடிங்.!

நந்தமூரி பாலகிருஷ்ணாவின் அதிரடி என்ட்ரி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தில் பிரபல தெலுங்கு…

5 hours ago

“WHAT BRO”நான் குல்லா போடுற ஆள் இல்லை..மேடையில் விஜயை தாக்கிய பிரபலம்.!

வாட் ப்ரோ..? கூல் சுரேஷின் சர்ச்சைக்குரிய உரை தமிழில் சில படங்களில் நடித்திருப்பவர் கூல் சுரேஷ்,இவர் நடித்து ஃபேமஸ் ஆனதைவிட…

6 hours ago

மருமகள், பேத்தியையும் விட்டுவைக்கவில்லை.. மாமியாருடன் சேர்ந்து செய்த பகீர் காரியம்!

கடலூரில், மருமகள் மற்றும் பேத்திகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக மாமனாரை மாமியாருடன் சேர்ந்து தீயிட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு…

6 hours ago

சர்ப்ரைஸ்.! ‘குட் பேட் அக்லி’ பட ரிலீஸில் ட்விஸ்ட்…தமிழில் இதுவே முதல்முறை.!

தமிழ் சினிமாவில் புதிய முயற்சி அஜித் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய "குட் பேட் அக்லி" படம் வருகிற ஏப்ரல்…

7 hours ago

எங்களுக்கு எந்த நிலத்தகராறும் இல்லை.. பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த செளந்தர்யா கணவர்!

சொத்து குறித்து மோகன் பாபு மற்றும் சௌந்தர்யா தொடர்பாக ஒரு தவறான செய்தி பரவி வருகிறது என நடிகையின் கணவர்…

7 hours ago

This website uses cookies.