சாட்சிகளுக்கு ஆபத்து.. அமலாக்கத்துறை கோரிக்கை ஏற்பு… செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவுக்கு செக் வைத்த நீதிமன்றம்!

சாட்சிகளுக்கு ஆபத்து.. அமலாக்கத்துறை கோரிக்கை ஏற்பு… செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவுக்கு செக் வைத்த நீதிமன்றம்!

சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தனர். இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக சுமார் 2,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதற்கிடையில் இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில்பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தள்ளுபடி செய்தது.

அதேநேரத்தில் செந்தில் பாலாஜி ஜாமீன் குறித்து கீழமை நீதிமன்றத்தை மீண்டும் நாடலாம் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. இதைத்தொடர்ந்து, ஏற்கனவே செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை நீதிமன்றம் அமர்வில் 2 முறை தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து 3-வது முறையாக செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை கடந்த வாரம் நடைபெற்றது. அப்போது அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்ய கோரி வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி அல்லி முன்பு கடந்த திங்கள் கிழமை காலை விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத்துறை தரப்பில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என தெரிவித்தனர். இதைதொடந்து, இந்த வழக்கின் விசாரணையை அடுத்த நாளான 9-ம் தேதி (அதாவது செவ்வாய் கிழமை) ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர், கடந்த 9-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் வரும் 12-ஆம் தேதி ஜாமீன் மனு மீது தீர்ப்பு வழங்கப்படுவதாக கூறி நீதிபதி அல்லி வழக்கை ஒத்தி வைத்தார். இந்நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்து சென்னை முதன்மை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனால் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை 3-வது முறையாக சென்னை முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சியங்கள் கலைக்க வாய்ப்புள்ளது என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

செந்தில் பாலாஜிக்கு நேற்று மீண்டும் நீதிமன்றக் காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் 15-வது முறையாக நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

AddThis Website Tools
Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஒரே ஒரு டயலாக் பேசுனது குத்தமா? ஷூட்டிங் ஸ்பாட்டில் லெஃப்ட் ரைட் வாங்கிய கவுண்டமணி…

கவுண்ட்டர் மணி… கோலிவுட்டில் கவுண்ட்டர் வசனத்திற்கென்றே பெயர் போனவர் கவுண்டமணி. இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு நாடக நடிகராக பல…

1 hour ago

விஜய் டிவி VJ பிரியங்காவுக்கு சைலண்டாக நடந்த 2வது திருமணம்? வெளியான புகைப்படம்!

விஜய் டிவியில் ஆன்கராக நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே, கொஞ்ச கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தார். இதையும்…

2 hours ago

தர்பூசணியை தாராளமாக சாப்பிடலாம்… உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு புதிய சிக்கல்!

தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தவறான கருத்துக்களை பரப்பியிருந்தார். தர்பூசணி பழத்தல் ரசாயணம் உள்ளது…

2 hours ago

லோகேஷிடமிருந்து அந்த நடிகருக்கு பறக்கும் ஃபோன் கால், ஆனா நோ ரெஸ்பான்ஸ்? அடப்பாவமே

லோகேஷ் பட ஹீரோ லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின்…

3 hours ago

நான் தான் பா கராத்தே பாபு- ரவி மோகனுக்கு ஷாக் கொடுத்த அமைச்சர்! இதான் டிவிஸ்ட்டே

கராத்தே பாபு “ஜீனி” என்ற திரைப்படத்தை தொடர்ந்து ரவி மோகன் தற்போது நடித்து வரும் திரைப்படம் “கராத்தே பாபு”. இத்திரைப்படத்தில்…

4 hours ago

படப்பிடிப்பில் நடிகையிடம் அத்துமீறல்.. போதைப்பொருளுடன் வந்த முன்னணி நடிகர்..!!

படப்பிடிப்பில் முன்னணி நடிகர் ஒருவர் போதையில் தன்னிடம் அத்துமீறியதாக பிரபல நடிகை பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார். இதையும் படியுங்க: சண்ட போட்டு…

4 hours ago