தயாநிதி மாறன் தொடர்ந்த வழக்கு. ஆஜரான இபிஎஸ் : நீதிமன்றம் போட்ட உத்தரவு!

தயாநிதி மாறன் தொடர்ந்த வழக்கு. ஆஜரான இபிஎஸ் : நீதிமன்றம் போட்ட உத்தரவு!

தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, மத்திய சென்னை மக்களவை தொகுதி புரசைவாக்கம் பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் போது, திமுக எம்பி தயாநிதி மாறன் பற்றி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

2019 தேர்தலில் வெற்றி பெற்று மத்திய சென்னை எம்பியாகவும், 2024 தேர்தலில் திமுக வேட்பாளராகவும் களமிறங்கிய தயாநிதி மாறன், கடந்த முறை வெற்றி பெற்ற போது நாடாளுமன்ற உறுப்பினர் நிதியை முறையாக செலவு செய்யவில்லை என கூறி எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.

மேலும் படிக்க: +1 தேர்ச்சி விகிதத்தில் முதலிடம்.. அரசுப் பள்ளிகளில் அதிக தேர்ச்சி… சாதனை படைத்த கோவை மாவட்டம்..!!

இந்த பேச்சு தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி மீது கிரிமினல் அவதூறு வழக்கு ஒன்றை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார் தயாநிதி மாறன்.

தான் முறையாக நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியை செலவு செய்துள்ளதாகவும், எடப்பாடி பழனிச்சாமி தன்மீது வேண்டுமென்னேற அவதூறு பரப்புகிறார் என்றும் குற்றம் சாட்டி இருந்தார்.

இதனை அடுத்து, இந்த வழக்கு விசாரணை இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றம் 13வது நடுவர் மன்றத்தில் நடைபெற்ற போது எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜரானார்.

பின்னர் இந்த வழக்கு விசாரணையை வரும் ஜூன் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்து அன்றைய தினம் இரு தரப்பு வாதங்களையும் விசாரிக்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ரோகித்தின் மோசமான உலக சாதனை.. தீயான குல்தீப் யாதவ்.. திணறிய நியூசிலாந்து.. இந்தியாவுக்கு 252 ரன்கள் இலக்கு

ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் ஒரு முறைகூட டாஸ் வெல்லாத கேப்டன் என்ற பிரைன் லாராவின் மோசமான உலக…

7 hours ago

மனவருத்தம் இல்லை.. ராஜ்ய சபா சீட் விவகாரத்தில் பிரேமலதா அதிரடி பதில்!

ராஜ்ய சபா சீட் பெறுவது தொடர்பாக அதிமுக உடன் எந்த வருத்தமும் இல்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா…

9 hours ago

திடீரென மொட்டையடித்த சுந்தர்.சி.. ரூ.1 லட்சம் நன்கொடை.. விறுவிறுப்படையும் மூக்குத்தி அம்மன் 2!

சுந்தர் சி - குஷ்பூ தம்பதியின் 25வது திருமண நாளை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம்…

11 hours ago

கூட்டணி குறித்து கேட்டால் இதைச் சொல்லுங்க.. அதிமுகவிடம் எதிர்பார்ப்பு.. முக்கிய காய் நகர்த்தும் இபிஎஸ்

அதிமுகவின் சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் திண்ணைப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். சென்னை: அதிமுக மாவட்ட…

12 hours ago

வாய்க்காலில் கிடந்த சடலம்.. சிக்கிய நண்பர்கள்.. திருட்டால் பறிபோன உயிர்!

கடலூர் அருகே திருடச் சென்றபோது ஒருவர் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்ததாக அவரது நண்பர்கள் மூவர் உள்பட 4 பேர் கைது…

12 hours ago

மேட்ச் முடிவில் காத்திருக்கும் அதிர்ச்சி.. டாப் 3 வீரர்களின் நிலைப்பாடு என்ன?

இந்தியா - நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன்…

14 hours ago

This website uses cookies.