அண்டை மாநிலத்திலும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டம் நடைமுறைக்கு வருகிறதா? வி.சி.க எம்பி கோரிக்கை!!

சேலம் சுகவனேஸ்வரர் கோவிலுக்கு புதிய அர்ச்சகர்களை நியமிக்கும் பொருட்டு அறநிலையத்துறை சார்பில் கடந்த 2018ம் ஆண்டு காலிப்பணியிட அறிவிப்பு வெளியானது.

அதில் யார்வேண்டுமென்றாலும் ஆகம விதிகள் படித்து இருந்தால் போதுமென குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரமணிய குருக்கள் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் குறிப்பிட்ட கோயில்களில் ஆகாமல் விதிகள் தெரிந்திருந்தால் போதும் என அறநிலையத்துறை விளக்கமளித்ததன் அடிப்படையில், ஆகம விதிகள் தெரிந்து அதில் தேர்ச்சி பெற்றிருந்தால் அவர்கள் யாராக இருந்தாலும் அர்ச்சகர்கள் ஆகலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் இருப்பதைப் போல புதுச்சேரியிலும் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்ற சட்டத்தை நிறைவேற்ற முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும், இந்த கோரிக்கையை முதலமைச்சர் பரிசீலனைப்பதாக வாக்குறுதி அளித்திருக்கிறார் என்றும் விசிக எம்பி ரவிக்குமார் பேட்டியளித்துள்ளார்.

மேலும், தமிழ்நாட்டில் இருப்பதைப் போல இங்கும் இந்து சமய அறநிலையத்துறை உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்த துறையின் கீழ் 231 திருக்கோவில்கள் உள்ளன.

அறங்காவலர் குழுக்கள் மூலமாக நிர்வகிக்கும் இந்த திருக்கோயில்கள் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டிலே 1970ம் ஆண்டிலேயே அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் கலைஞர் கருணாநிதி அவர்களால் இயற்றப்பட்டது.

நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக நடந்த வழக்கில், அர்ச்சகர் நியமனங்கள் சாதி, பிறப்பு மற்றும் தகுதியின் அடிப்படையில் இருக்கக் கூடாது எனவும் ஆகமங்கள் மற்றும் சடங்குகளில் பயிற்சி இருந்தால் யாரை வேண்டுமானாலும் அர்ச்சகராக நியமிக்க எந்த தடையும் இல்லை என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பில் தெளிவாக கூறப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் புதுச்சேரியிலும் அதே போல ஒரு சட்டம் இயற்றப்பட வேண்டும்.

மேலும், தமிழ்நாட்டில் இருப்பதை போல அர்ச்சகர்கள் பயிற்சி பள்ளி ஒன்றையும் நிறுவ வேண்டும். அதனை நிறுவுவதற்கு காலதாமதம் ஆகும் என்றால் அதுவரை தமிழ்நாட்டில் இருக்கின்ற பயிற்சி பள்ளியில், புதுச்சேரி யூனியன் பிரதேச இளைஞர்கள் படிப்பதற்கான வாய்ப்பை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் என்று முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக எம்பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

பிளாக்கில் டிக்கெட் விற்பவர்களுக்கு முதல்வர் கனவு.. விஜய்யை மறைமுமாக சாடிய அமைச்சர்!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…

18 minutes ago

கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…

2 hours ago

வெற்றிமாறன் மேல் உள்ள பயத்தால் சூர்யா எடுத்த திடீர் முடிவு? அப்போ வாடிவாசலோட நிலைமை?

இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…

2 hours ago

அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!

நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…

2 hours ago

ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?

தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

3 hours ago

செந்தில் பாலாஜி SAFE… அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததால் உச்சநீதிமன்றம் உத்தரவு!

செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம். செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளி வந்ததும்…

3 hours ago

This website uses cookies.