அமைச்சர் ரோஜா குறித்து அவதூறு.. பண்டாரு மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் : ஆதரவு கொடுத்த பாஜக பிரமுகர்!!!

அமைச்சர் ரோஜா குறித்து அவதூறு.. மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் : ஆதரவு கொடுத்த பாஜக பிரமுகர்!!!

ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவையில் நடிகை ரோஜா சுற்றுலா துறை அமைச்சராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் நடிகை ரோஜா ஆபாச படத்தில் நடித்திருப்பதாக கூறியது அம்மாநில அரசியல் சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில் நடிகை கடந்த 2 நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த ரோஜா, தெலுங்கு தெசம் கட்சி தலைவர்கள் தன்னை இழிவான வார்த்தைகளால் அவமதிப்பதாக கண்ணீருடன் தெரிவித்தார்.

மேலும் தன்னை இழிவாக பேசியவர்கள் மீது வழக்கு தொடர இருப்பதாகவும் கூறினார். தன்னை பற்றி அவதூறாக பேசிய தெலுங்கு தேசம் கட்சியினரை சந்திரபாபு நாயுடு ஏன் கண்டிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

ஆனால் தனது சொந்த கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே ரோஜாவுக்கு பெரியளவில் ஆதரவு இல்லை என்று கூறப்படுகிறது.

ரோஜாவுக்க்கு ஆதரவாக ஒரு சில தலைவர்கள் மட்டுமே உள்ளனர். வலுவான பதிலடி கொடுக்கும் பெண் அமைச்சர்களோ அல்லது அமைச்சர்களோ யாரும் ரோஜாவை பகிரங்கமாக ஆதரிக்கவில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

இந்த விவகாரம் அக்கட்சிக்க்குள் விவாதப் பொருளாக மாறி உள்ளது. பெண் அமைச்சர்கள் விடாத ரஜினி, தானேடி வனிதா, உஷாஸ்ரீ சரண் ஆகியோர் ரோஜாவுக்கு ஆதரவாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இதனால் சொந்த கட்சிக்குள்ளேயே ரோஜா ஓரங்கட்டப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இதுகுறித்து குஷ்பு இன்று தெரிவித்துள்ள கருத்தில், “பெண் அமைச்சர் குறித்த பண்டாருவின் கருத்துகள் அவரின் பாதுகாப்பு மற்றும் சீரழிவுக்கு வழிவகுக்கும். பண்டாரு ஒரு மனிதனாக தோன்றி விட்டார். அவர், அமைச்சர் ரோஜாவிடம் உடனடியாக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

பிரதமர் மோடி மகளிருக்கு பல்வேறு இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்தாலும், பண்டாரு போன்றவர்கள் இதுபோன்ற நேரத்தில் பெண்களுக்கு எதிராக அவர்களை இழிவுபடுத்தி பேசுவது மிகவும் கண்டனத்துக்குரியது.

பெண்களை மதிப்பவர்கள் இதுபோன்று பேச மாட்டார்கள். பெண்களை துஷ்பிரயோகம் செய்வது தனது பிறப்புரிமை என்று பண்டாரு நினைக்கிறாரா என தெரியவில்லை. நாட்டில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும்.

விவாதத்தின் போதுகூட ஒரு பெண்ணை இவ்வளவு அநாகரிகமாக பேசுவது மிகவும் கண்டிக்கக் கூடியது. ஆகவே பண்டாரு உடனடியாக அமைச்சர் ரோஜாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்கும் வரை போராடுவேன்” என தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு… குற்றவாளிகளுக்கு பரபரப்பு நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக இன்று வரை பல்வேறு தரப்பிலும் அதிர்வலைகள் நீடித்து வருகின்றன. 2019ஆம்…

27 minutes ago

நான் நடிக்கவே மாட்டேன்னு சொன்னேன், ஆனா அவர்தான் என்னைய?- ஓபனாக போட்டுடைத்த சிங்கம்புலி…

இயக்குனர் டூ காமெடி நடிகர் அஜித்தின் “ரெட்”, சூர்யாவின் “மாயாவி” ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் சிங்கம்புலி. எனினும் இத்திரைப்படங்களை தொடர்ந்து…

53 minutes ago

டீக்கடைக்குள் புகுந்த லாரி… விபத்தில் சிக்கிய குழந்தை : 5 பேர் படுகாயங்களுடன் அனுமதி!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மெட்டாலா பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற மெட்டாலா ஆஞ்சநேயர் கோவிலானது அமைந்துள்ளது. கோவிலில் இன்று…

2 hours ago

17 வயதுல அந்த மாதிரியான படத்தில்.. தலைகாட்ட முடியல.. என் அப்பாதான் : அமலா பால் பகிர்ந்த உண்மை!

நடிகை அமலாபால் மைனா படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. தொடர்ந்து விஜய்,…

2 hours ago

அந்த கலவரத்திற்கு மோடிதான் பொறுப்பு- சர்ச்சையை கிளப்பி வரும் ஆமிர்கான் பேட்டி…

டாப் நடிகர் பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆமிர்கான். இவர் தொடக்கத்தில் குழந்தை நட்சத்திரமாகவும் உதவி இயக்குனராகவும் தனது…

2 hours ago

பிரித்விராஜ்ஜுக்கு வந்த நோட்டீஸ்; கவர்மெண்ட்டு வேலையை காட்டிருச்சு- பொங்கும் நெட்டிசன்கள்…

எம்புரானுக்கு வந்த வம்புகள் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியான “L2 எம்புரான்”…

3 hours ago

This website uses cookies.