சென்னை : மழையால் பாதித்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்காத திமுக அரசைக் கண்டித்து டெல்டா மாவட்ட தலைநகரங்களில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்ததன் காரணமாக, டெல்டா பகுதி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். எனவே, விவசாயிகள் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகி உள்ளதை சுட்டிக் காட்டியும், நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தியும் 22ம் தேதி டெல்டா மாவட்டங்களில் தாலுக்கா அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று அதிமுக அறிவித்தது.
அதன்படி, டெல்டா மாவட்ட தாலுக்காக்களில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக,
மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது, விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை வழங்க வலியுறுத்தி அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கோஷங்களை எழுப்பினர்.
இதேபோல, டெல்டா மாவட்டங்களில் உள்ள அனைத்து தாலுக்கா அலுவலகங்களின் முன்பு அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீக்கு என்ன ஆச்சு? சமீப நாட்களாக நடிகர் ஸ்ரீ குறித்துதான் சமூக வலைத்தளங்களில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. நடிகர் ஸ்ரீ …
பிரதமர் மோடியை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா திடீரென புகழ்ந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளம் ஒன்றுக்கு பிரமேலதா…
சர்ச்சையை கிளப்பிய வீடியோ “சிறகடிக்க ஆசை” என்ற பிரபலமான டிவி தொடரில் வித்யா என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமாக…
நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் நாகசைதன்யா பின்னாளில் பிரிந்தனர். அதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், நாகர்ஜூனாவின்…
துருவ் விக்ரம் - அனுபமா ஜோடி… மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் “பைசன்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம்…
திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது மக்கள நீதி மையம். இக்கட்சியின் தலைவராக இருப்பவர் நடிகர் கமல்ஹாசன். கடந்த மக்களவை…
This website uses cookies.