சென்னை : பல்லாவரம் அருகே மாமூல் தராத கடைகளை அடித்து உடைத்த திமுக கவுன்சிலரின் கொழுந்தனும், திமுக நிர்வாகியுமான தினேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தாம்பரம் மாநகராட்சியில் 31வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினராக இருப்பவர் சித்ராதேவி. இவரது கணவர் முரளியின் தம்பி தினேஷ்.
இவருடைய அண்ணி தேர்தலில் வெற்றி பெற்று கவுன்சிலர் ஆனதில் இருந்தே, இவர் தனது ஸ்டெயிலை மாற்றிவிட்டார். அதாவது, ஒயிட் அன்ட் ஒயிட்டில் வலம் வருவது, ஏரியாக்களில் பஞ்சாயத்து செய்வது மற்றும் கடைகளில் மிரட்டி மாமூல் வசூலிப்பது போன்ற செயல்களில் ஈடுபடத் தொடங்கினார்.
மாமூல் வசூலிக்கும் போது பிரச்சனைகளை ஏற்படாமல் என்பதால், தனது தற்காப்புக்காக, சுகுமார் என்ற ரவுடி படையுடன் சென்று பணம் வசூலிப்பாராம். கேட்கும் பணத்தை தராவிட்டால், அந்தக் கடையை உடைத்து சேதப்படுத்துவது இவருடைய பாணி என்று சிலர் கூறுகின்றனர். இதற்கு பயந்தே ஒயின்ட் அன்ட் ஒயிட் தாதா தினேஷ் வரும் போதே, பணத்தை எடுத்து சில கடைக்காரர்கள் கொடுத்து விடுவார்களாம்.
இந்த நிலையில், சங்கர் நகர் பகுதியில் உள்ள கடையில் தினேஷ் மாமூல் கேட்டுள்ளார். ஆனால், அந்த வியாபாரி கொடுக்க மறுத்ததால், சாலையில் கிடந்த கற்களால் அடித்து கடையை சேதப்படுத்தியதோடு, கடையில் இருந்த பொருட்களை சாலையில் தூக்கி வீசி ரகளை செய்துள்ளார்.
திமுக நிர்வாகியின் இந்த அட்டகாசத்தை அறிந்து சம்பவ இடத்திற்கு போலீஸ் வருவதற்குள், அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்கள். பின்னர், அந்தக் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, அதன்பேரில் திருநீர்மலை பகுதியில் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், சென்னையில் உள்ள பல்வேறு காவல்நிலையங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் சுகுமார் மீது நிலுவையில் இருப்பதும், அவன் தொடர் கிரைம் குற்றவாளி எனவும் போலீசார் தெரிந்து கொண்டனர். பின்னர், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.
அண்ணி திமுக கவுன்சிலர் என்பதால், கெட்ட ஆட்டம் போட்ட கொழுந்தனுக்கு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும் என்பதே திருநீர்மலை பகுதி வியாபாரிகளின் கோரிக்கையாகும்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.