தருமபுர ஆதினத்தை தோளில் சுமக்க வருவேன் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது தமிழக அரசியலில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை – தருமபுர ஆதினம் மடத்தில் பாரம்பரியமாக பல நூற்றாண்டுகளுக்கு மேலாக பட்டண பிரேவேச நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, ஆதினத்தை பல்லக்கில் தூக்கிச் செல்லும் நிகழ்வுக்கு தமிழக அரசு தடை விதித்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, தடை விதிக்கப்பட்டது குறித்து பேசிய மதுரை ஆதீனத்தின் 293-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், 500 ஆண்டுகளாக நடக்கும் பட்டினப் பிரவேச நிகழ்ச்சிக்கு தடை விதித்திருப்பது வருத்தமளிப்பதாகவும், உயிரைக் கொடுத்தாவது தருமபுர ஆதீனத்தின் பட்டினப் பிரவேசத்தை நடத்துவதாகவும் கூறினார். மேலும், மனிதர்களை மனிதர்களே தூக்குவது இல்லை, இது குருவை சிஷ்யர்கள் தூக்கிச்செல்வதாகவும் அவர் கூறினார்.
இதனிடையே, 4 நாட்களுக்குப் பிறகு இன்று கூடிய சட்டப்பேரவையில், தருமபுர ஆதின விவகாரம் தொடர்பாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
அப்போது, அவர் பேசியதாவது :- தருமபுரம் ஆதினத்தை பல்லக்கில் தூக்குவது பாரம்பரியமாக நடந்து வரும் நிகழ்வு. ஆதினத்தில் வசிக்கும் 72 பேர் விருப்பப்படிதான் தருமபுரம் ஆதினத்தை பல்லக்கில் தூக்கிச் செல்வதில் மரியாதை குறைவு ஏதும் கிடையாது. பாரம்பரியமாக நடந்து வரும் தருமபுர ஆதினத்தை பல்லக்கில் தூக்கும் நிகழ்விற்கான தடையை நீக்க வேண்டும், என வலியுறுத்தினார்.
இந்த தீர்மானத்தின் மீது அமைச்சர் சேகர் பாபு பதிலளித்து பேசியதாவது :- பட்டணப் பிரவேசம் குறித்து ஆதினங்களுடன் 3 மணி நேரத்திற்கு மேல் ஆலோசனை நடத்தப்பட்டது. பல்லக்கில் தூக்கும் நிகழ்வு 22ம் தேதி நடைபெறும் என்பதால், அதற்குள் சுமூக தீர்வு எட்டப்படும். தருமபுர ஆதினத்துடன் முதலமைச்சர் ஸ்டாலின் பேசி, நல்ல முடிவை அறிவிப்பார். சிலர் செய்த தவறுக்காக பல்லக்கில் தூக்கும் நிகழ்வை அரசியலாக்க வேண்டாம், எனக் கூறினார்.
இந்த நிலையில், தருமபுர ஆதினத்தை தோளில் சுமக்க வருவேன் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிரடியாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :- தருமபுர ஆதீனத்தின் பல நூற்றாண்டுகள் பழமையான ‘பட்டின பிரவேசம்’ மீதான தடை தமிழக நாகரிகம் மற்றும் கலாச்சாரத்திற்கு எதிரானது. ஆதினத்தைத் தோளில் சுமக்க நான் நேரில் வருவேன் என்பதைத் தமிழக அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த சட்டவிரோத உத்தரவை எதிர்த்து நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்குமாறு ஆதினத்திடம் கோரிக்கை வைப்போம். கோபாலபுர குடும்பத்தை அவரது கட்சியினர் தூக்கிச் சுமப்பதை போல் அல்ல இது. ஊழியம் மற்றும் குருவுக்குச் செய்யும் சேவையின் உள்ள வேறுபாடுகளைக் கூட அறியாதவர் இந்த கோபாலபுர குடும்பத்தார். தமிழக பாஜக இந்த நிகழ்ச்சியை நடத்திக் காட்டத் தயாராக இருக்கிறது, எனக் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.