சென்னை : முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99வது பிறந்த நாளையொட்டி, ஆரூர்தாஸுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, கருணாநிதியின் 99வது பிறந்த நாள் இன்று அரசு விழாவாகக் கொண்டாடப்பட இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக, சென்னை அண்ணா அறிவாலயத்திலும், கோபாலபுரம் இல்லத்திற்கு முன்பும் வைக்கப்பட்ட கருணாநிதியின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனிடையே, திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். தியாகராய நகரில் உள்ள ஆரூர்தாஸின் வீட்டுக்கு நேரில் சென்று இந்த விருதை வழங்கினார்.
பாசமலர், விதி, வேட்டைக்காரன், அன்பே வா உள்ளிட்ட படங்கள் உள்பட முன்னணி நடிகர்கள், நடிகைகள் நடித்த 1,000க்கும் மேற்பட்ட படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார் ஆரூர் தாஸ்.
தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று பின்னர், அறிவிப்பாளர், பாடகர் என பன்முகத் திறமை கொண்டவர் நடிகர் சிவக்குமார் ஜெயபாலன். இதையும்…
கேஜிஎஃப் கதாநாயகி யாஷ் நடித்த “கேஜிஎஃப்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் தனது முதல் திரைப்படத்திலேயே…
கனவுக்கன்னி தற்கால இளைஞர்களின் கனவுக்கன்னிகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் மிக பிரபலமான நடிகையாக வலம்…
தமிழ் திரைப்பிரபலங்களின் திடீர் மறைவு திரையுலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. அந்த வகையில் பிரபல திரைப்பட இயக்குநர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.…
தமிழக வெற்றி கழகம் கட்சியின் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் இன்று மாலை கோவை சக்தி சாலை குரும்பபாளையம் பகுதியில்…
This website uses cookies.