பழி வாங்குவதற்காக ED அதிகாரியை கைது செய்யவில்லை… அண்ணாமலைக்கு சூசகமாக திமுக எம்பி கனிமொழி பதில்!!

பழி வாங்குவதற்காக ED அதிகாரியை கைது செய்யவில்லை… அண்ணாமலைக்கு சூசகமாக திமுக எம்பி கனிமொழி பதில்!!

மதுரை திருப்பரங்குன்றம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் கலைஞர் 100 வினாடி வினா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக திமுக மகளிர் அணி செயலாளரும், எம்.பியுமான கனிமொழி பங்கேற்றார். இந்த நிகழ்வில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனும் பங்கேற்றார்.

பின்னர் திமுக எம்.பி கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய கனிமொழி, “அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் வாங்கியதைத் தொடர்ந்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம். மத்திய அரசு போல, பாஜக போல திமுக பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கவில்லை.

நீதி, நியாயத்தை நிலை நாட்டுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால் யாரையும் மிரட்டுவதற்காக செய்துவிட்டு பாதியில் நிறுத்தப் போவதில்லை.” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஒரு அதிகாரி லஞ்சம் வாங்கியதை வைத்து அமலாக்கத்துறையையே குற்றம் சொல்லக்கூடாது என பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த கனிமொழி, பாஜக மீதும் பாஜக நிர்வாகிகள் மீதும் சிஏஜி அறிக்கையில் முன்வைத்த பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை, அதற்கு முதலில் பதில் சொல்லட்டும்” எனக் கூறினார்.

திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசு மருத்துவர் சுரேஷ் பாபு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, அமலாக்கத் துறை அவர் மீது 2018ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது. இந்நிலையில், சுரேஷ் பாபு மீது நடவடிக்கை எடுக்க பிரதமர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளதாகவும், வழக்கில் இருந்து விடுதலை செய்வதாகக் கூறி ரூ.3 கோடி லஞ்சம் தருமாறு மதுரை அமலாக்கத்துறை அதிகாரியான அங்கித் திவாரி பேரம் பேசியுள்ளார்.

முதலில் ரூ. 20 லட்சம் பெற்ற நிலையில், அடுத்த தவணை பணத்தை பெறும்போது, அங்கித் திவாரியை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையும் களவுமாகப் பிடித்தனர். தொடர்ந்து, அங்கித் திவாரி வீட்டிலும் அமலாக்கத்துறையின் மதுரை அலுவலகத்திலும், லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர்.

அங்கித் திவாரி நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் பெற்று கையும் கையூட்டுமாகச் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை அடுத்தடுத்து ரெய்டுகளை நடத்தி வந்த நிலையில், தற்போது அமலாக்கத்துறை அதிகாரியை மாநில அரசின் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்திருப்பது விவாதப்பொருளாகி உள்ளது. இந்நிலையில் தான் பழிவாங்கும் நடவடிக்கை அல்ல, யார் தவறு செய்தாலும் தண்டனை உறுதி எனக் கூறியுள்ளார் கனிமொழி.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

குடிக்க தண்ணீர் கேட்டு தம்பதியை தாக்கி நகை பறிப்பு : மர்மநபர்களை தேடும் போலீஸ்..!!

சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…

12 hours ago

பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!

டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…

13 hours ago

பிரியங்காவை வைத்து விளையாடும் விஜய் டிவி.. 8 வருட ரகசிய உறவு : பிரபலம் பகீர்!

பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…

14 hours ago

திருமணம் செய்த உடனே குழந்தை பிறக்க வேண்டுமென்றால்… சர்ச்சையை கிளப்பிய திமுக எம்பி பேச்சு!

தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…

14 hours ago

விஜய் பங்கேற்ற இஃப்தார் நோன்பு.. சீமான் சொன்ன அதிரடி காரணம்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…

16 hours ago

2 மகன்களை கொலை செய்து மாடியில் இருந்து குதித்த தாய் : அதிர்ச்சியூட்டும் சம்பவம்!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…

18 hours ago

This website uses cookies.