திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக கடந்த ஏப்ரல் மாதம் மகேஸ்வரி பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன்னதாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு தஞ்சாவூர் உள்ளிட்ட மாநகராட்சிகளில் கமிஷனராக பணியாற்றியவர்.
இதற்கிடையே இவர் பணியாற்றிய பொழுது மாநகராட்சி பகுதிகளில் நடக்கும் பணிகளுக்கு கூடுதலாக கமிஷன் கேட்டதாக புகார் எழுந்தது.
இதனைத் தொடர்ந்து, இன்று திண்டுக்கல் ஆர்.எம் காலனி மூன்றாவது கிராசில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி நாகராஜ் ஆய்வாளர் ரூபா கீதா ராணி தலைமையிலான பத்துக்கு மேற்பட்ட போலீசார் இன்று ஏழு முப்பது மணி அளவில் ஆணையர் மகேஸ்வரி வீட்டில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும், அவரது வீட்டில் உள்ள சொத்து ஆவணங்கள், ரொக்க பணம் ஆகியவற்றிற்கு முறையாக கணக்கு உள்ளதா, கணக்கில் வராத பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா?… என ஒவ்வொரு அறையாக சோதனை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக மகேஸ்வரி பதவியேற்று கொண்டு இரண்டு மாதங்கள் கூட இன்னும் நிறைவடையாத நிலையில், லஞ்ச ஒழிப்பு போலீசாரின் இந்த அதிரடி சோதனை காரணமாக, மாநகராட்சியில் அவருடன் நெருக்கமாக இருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
காலை ஏழு முப்பது மணி அளவில் தொடங்கிய சோதனை தற்போது வரை நடைபெற்று வருகிறது.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.