திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள பட்டாசு கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள சென்னமநாயக்கம்பட்டி அருணாச்சலம் நகர் பகுதியில் அர்ஜுன் பட்டாசு கடை என்ற கடை செயல்பட்டு வருகிறது. பல வருடங்களாக குடியிருப்பு பகுதிகளில் இந்தப் பட்டாசு கடை செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது பட்டாசு கடையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டு, கடையில் இருந்த பட்டாசுகள் மிகப்பெரிய சத்தத்துடன் வெடிக்க தொடங்கின. இதில், தீவிபத்தில் சிக்கி ஒருவர் உடல்கருகி உயிரிழந்தார்.
உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே என்பதால், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உட்பட அனைத்து அரசு அதிகாரிகளும் நேரில் வந்து தற்போது பட்டாசு கடைகள் உள்ள தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
பட்டாசு கடைக்குள் யாரும் உள்ளார்களா..? என்பது குறித்து முழுவதுமாக தீயை அணைத்தனர். குடியிருப்பு பகுதியில் அருகே பட்டாசு கடை இருந்ததால், மிகப்பெரிய சத்தத்துடன் வெடித்ததால் அருகில் இருந்த குடியிருப்பு பகுதி மக்களும் வெளியே ஓடினர். மேலும், பட்டாசு கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த நான்கு சக்கர வாகனம் மற்றும் இருசக்கர வாகனங்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.