அதிருப்தி மேல் அதிருப்தி.. வடியாத வெள்ளம்.. அடிப்படை வசதியின்றி தவிக்கும் மக்கள் : திமுகவுக்கு எதிராக சாலைமறியல்!!
மிக்ஜாம் புயல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை துண்டிக்கப்பட்ட மின்சாரம் சென்னையின் பெரும்பாலான பகுதியில் மின்விநியோகம் நிறுத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னையைக் கடந்து சென்றுவிட்ட நிலையில் மீண்டும் விநியோகம் தடையின்றி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. திங்கள்கிழமை காலை ஒரு சில இடங்களில் மட்டும் மின்விநியோகம் தொடங்கியது.
ஆனால் ஒரு சில மணி நேரங்களில் மீண்டும் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பிற்கு உள்ளானது. இந்நிலையில் எண்ணூர், எர்ணாவூர், திருவொற்றியூர் மீனவ குப்பம், மின்வாரிய அலுவலகம், விம்கோ நகர், பெரியார் நகர், வடக்கு மாடவீதி, எல்லையம்மன் கோயில் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து திருவொற்றியூரில் ஒரு சில இடங்களில் மட்டும் மின்விநியோகம் தொடங்கியது. ஆனாலும் பெரும்பாலான பகுதிகளில் இயல்பு நிலை திரும்பாததை யடுத்து சாலை மறியல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மறியலில் ஈடுபட்டுள்ள பொதுமக்களை சமாதானப்படுத்தும் முயற்சிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.