எஸ்பிஐ வங்கி மீது அதிருப்தி… கேட்டது ஒண்ணு.. கொடுத்தது ஒண்ணு : அதிரடி உத்தரவு போட்ட உச்சநீதிமன்றம்!!

எஸ்பிஐ வங்கி மீது அதிருப்தி… கேட்டது ஒண்ணு.. கொடுத்தது ஒண்ணு : அதிரடி உத்தரவு போட்ட உச்சநீதிமன்றம்!!

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதி வாங்கும் நடைமுறையை உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் ரத்து செய்து, தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வெளியிட வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை அடுத்து தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை எஸ்பிஐ வங்கி இந்திய தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்தது. இதனை தேர்தல் ஆணையமும் வெளியிட்டது. அதில், எந்தந்த கட்சிக்கு, எந்தந்த நிறுவனங்கள் பணம் வழங்கியது தொடர்பான விவரங்கள் இடம்பெற்றது. ஆனால், சீரியல் நம்பர்கள் வெளியிடவில்லை.

தேர்தல் பத்திர எண்களை எஸ்பிஐ வங்கி வெளியிடாதது குறித்து உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை கடந்த வெள்ளிகிழமை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்றது.

அப்போது கேள்விகளை எழுப்பிய நீதிபதி, தேர்தல் பத்திர எண்களை வெளியிட வேண்டும் என்றும் இதுகுறித்து இன்று விளக்கமளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.

அதன்படி, தேர்தல் பத்திர எண்கள் தொடர்பான வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, எஸ்பிஐ வங்கியின் நடவடிக்கையில் திருப்தி அளிக்கவில்லை என்று நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

தலைமை நீதிபதி கூறியதாவது, அனைத்து தரவுகளையும் வெளியிட உத்தரவிட்டும் எஸ்பிஐ, ஏன் சீரியஸ் எண்களை வெளியிடவில்லை? உச்சநீதிமன்ற உத்தரவிற்காக ஏன் காத்திருக்க வேண்டும்? என கேள்வி எழுப்பி, அணைத்து தரவுகளையும் வெளியிட வேண்டும் என முதல் உத்தரவிலேயே தெளிவாக உள்ளது என்றார்.

உத்தரவில் என்ன சந்தேகம் உள்ளது? நீதிமன்றத்துடன் விளையாடுகிறீர்களா? என கட்டமாக தெரிவித்தார். எனவே, உச்சநீதிமன்றம் ஏற்கனவே அளித்த தீர்ப்புப்படி பத்திர எண்களை வெளியிட வேண்டும்.

ஒவ்வொரு தேர்தல் பத்திரத்திலும் உள்ள தனி அடையாள எண்ணை கட்டாயம் வெளியிட வேண்டும். மறைக்கக்கூடிய அனைத்துத் தகவல்களையும் பொதுவெளியில் SBI வெளியிட வேண்டும் என உத்தரவிட்டனர்.

அதாவது, மார்ச் 21ம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்தல் பத்திர ரகசிய எண்ணை வெளியிடுவது தொடர்பாக எஸ்பிஐ வங்கி பிராமண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.

பத்திரம் வாங்கப்பட்ட தேதி, பெயர், சீரியல் எண்கள், ஆல்பா நியூமரிக் எண்கள் உள்ளிட்ட அனைத்தையும் வெளியிட வேண்டும். இதற்கு எஸ்பிஐ வங்கியும் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், எஸ்பிஐ தரவுகளை தாக்கல் செய்தபின் தேர்தல் அதனை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

என்னைய தவிர எல்லாத்துக்கும் நேஷனல் அவார்டு- வெற்றிமாறனுக்கு சங்கடத்தை ஏற்படுத்திய நடிகை…

தேசிய விருதுகளை குவித்த திரைப்படம்… வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “ஆடுகளம்”. மிகவும்…

54 minutes ago

என் மேல நம்பிக்கை வச்சதுக்கு மிக்க நன்றி அஜித் சார்- அர்ஜுன் தாஸ் உருக்கம்

வெளியானது குட் பேட் அக்லி… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம்…

2 hours ago

‘இனி நம்மல யாருமே பிரிக்க முடியாது’.. தண்டவாளத்தில் கட்டி அணைத்தவாறு தற்கொலை செய்த காதல் தம்பதி!

வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே உள்ள பட்டியூர் பகுதியில் இருக்கும் சென்னை டு பெங்களூர் ரயில்வே தண்டவாளத்தின் அருகே உள்ள…

2 hours ago

ராமதாஸ் முடிவுக்கு எதிராக போர்க்கொடி.. அன்புமணிக்கு ஆதரவாக எழுந்த முதல் குரல்!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று காலை 11 மணியளவில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் செய்தியாளர்கள்…

2 hours ago

பூப்படைந்த பட்டியலின மாணவிக்கு தனியார் பள்ளியில் அரங்கேறிய அவலம்.. அதிர்ச்சி வீடியோ!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா வரதனூர் பஞ்சாயத்து செங்கோட்டை பாளையம் கிராமத்தில் இயங்கி வரும் சுவாமி சிப்பவாணந்த மெட்ரிகுலேஷன் பள்ளி…

3 hours ago

கோவைக்கு வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்… ஜெயிலர் 2 குறித்து முக்கிய அப்டேட்!

ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதையும் படியுங்க: விஜய் பட…

3 hours ago

This website uses cookies.