திமுக பிரமுகர்களின் சொத்து பட்டியலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டது குறித்து அமைச்சர் துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி வேலூரில் திமுக மத்திய மாவட்ட அலுவலகம் அருகில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்ற அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு அம்பேத்கரின் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் மேயர் சுஜாதா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
பின்னர் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பேருக்கு தான் காவிரி குண்டாறு இணைப்பு என்பது ஆனால் நாங்கள் தான் அதை செய்கிறோம். காவிரி குண்டாற்றை இணைத்துள்ளோம். காவிரி தெற்கு வெள்ளாறு வகையின் வழியாக குண்டாற்றை இணைக்கிறோம். கிணற்றை வெட்டுகிறோம். ஆயிரம் கோடியில் இதனை செய்துள்ளோம். காவிரி குண்டாறும் விரைவில் வரும்.
பாஜக தலைவர் அண்ணாமலை சொத்து பட்டியலை வெளியிட்டுள்ளார். அது எல்லாம் ஒரு அரசியல் ஸ்டாண்ட், என்று கூறினார்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.