தூத்துக்குடி ; திருச்செந்தூர் நகராட்சியில் நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறை குறித்து திமுக கவுன்சிலர் புலம்பும் ஆடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இதில், பெரும்பாலான வார்டுகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனிடையே, 3வது வார்டு திமுக கவுன்சிலர் ரூபன் என்பவர் வெளியிட்ட வாட்ஸ்அப் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
நாம் அனைவரையும் பொதுமக்கள் அடித்து விரட்ட கூடிய நிலைமை வரும் என்று புலம்பிய வார்டு கவுன்சிலர் ரூபன், ”இது நிர்வாக சீர்கேடா, இல்ல கடவுளோட சோதனையா, இல்ல திமுக கவுன்சிலர்களாகிய நாங்க வந்த தரித்திரமா என்று தெரியவில்லை. அனைத்து பொதுமக்களும் குடிநீர் கிடைக்கவில்லை என்று திட்ட ஆரம்ப்பிச்சிட்டாங்க, ஆனால் குடிநீர் கொடுக்கவும் முடியவில்லை.
நகராட்சி நிர்வாகம் குடிநீருக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. புது நகராட்சி கட்டடம், புது மார்க்கெட் கட்டடம் போன்றவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். தண்ணீருக்கு முக்கியத்துவம் கொடுங்க. இல்லையென்றால் ஒரு நாள் நாம் அனைவரையும் பொதுமக்கள் அடித்து விரட்ட கூடிய நிலைமை வரும், என்று கூறியுள்ளார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.