‘காமராஜருக்கு கல்லறை கட்டுனதே திமுக தான்’… ஆர்எஸ் பாரதி சர்ச்சை பேச்சு.. காங்கிரஸுக்கு எழுந்த கோபம்.. திமுகவுக்கு நேரடியாக கொடுத்த பதிலடி..!! (வீடியோ)

காமராஜர் பற்றி திமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்.பியுமான ஆர்.எஸ்.பாரதி பேசியதற்கு காங்கிரஸ் கடும் கண்டனத்தை தெரிவித்தள்ளது.

கடந்த சில நாட்களாக திமுக அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், ஏதேனும் கூறி சர்ச்சையில் சிக்கி கொள்வது வாடிக்கையாகி வருகிறது. குறிப்பாக, பட்டியலினத்தவர்கள் நீதிபதி பதவிக்கு வந்தது, திமுக போட்ட பிச்சை என்று திமுக முன்னாள் எம்பி ஆர்எஸ் பாரதி பேசி பெரும் பரபரப்பை கிளப்பினார்.

அவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். அதுமட்டுமில்லாமல், இந்த விவகாரம், நீதிமன்றம் வரையில் சென்று, ஆர்.எஸ். பாரதி முன்ஜாமீன் வாங்கி பிணையில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில், ஒரு நிகழ்ச்சியின் மேடையில் பேசிய ஆர்.எஸ்.பாரதி, “பெருந்தலைவர் காமராஜர் திமுகவினரின் கட்டை விரலை வெட்டுவேன் என்றார். அவருக்கு கல்லறை கட்டியதே நாம் தான். இன்று வரை அனைவரும் காமராஜருக்காக நாம் கட்டிய கல்லறையைத் தான் பூஜித்துக் கொண்டிருக்கிறார்கள். மன்னிக்க வேண்டும், நான் வரலாற்றைத்தான் சொல்கிறேன், யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் அல்ல” எனப் பேசினார்.

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் நிலையில் திமுக நிர்வாகி காமராஜர் பற்றி இப்படிப் பேசியது அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியது.

திமுகவைச் சேர்ந்த ஆர்எஸ் பாரதியின் இந்தப் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், பெருந்தலைவரை நேசிப்பவர்களும், அவர்களது பெயரை சொல்லி அரசியல் செய்யும் தலைவர்களும் இவற்றை சகித்துக்கொள்ள மாட்டார்கள் என்றும், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியும், கொடுக்காத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி பொற்கால ஆட்சியை செய்து எல்லோருக்கும் உதாரணமாகத் திகழ்ந்தவர் பெருந்தலைவர் காமராஜர் எனக் கூறினார்.

மேலும், பெருந்தலைவரைப் பற்றி புறம்பேசி விளம்பரம் தேடிக்கொள்பவர்கள் யாராக இருந்தாலும் எந்த இயக்கதில் இருந்தாலும் அவர்களை மக்கள் நிராகரிப்பார்கள்” எனத் தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், “பெருந்தலைவர் காமராஜரை இழிவு படுத்தி இது போன்ற (திமுகவின்) அநாகரிகமான பொய்யான பேச்சு. திரு. ஆஎஸ் பாரதி அவர்களின் பேச்சை வன்மையான கண்டிக்கிறேன். பெருந்தலைவர் என்றும் வெட்டுவேன் என்று அரசியல் பேசியவர் இல்லை . அவர் புகழ் என்றும் வாழும் ..,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

திமுக நிர்வாகியின் இந்த சர்ச்சை பேச்சால் கூட்டணி கட்சிகளுக்குள் புகைச்சல் ஏற்பட்டு வருகிறது.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

அட்லீ-அல்லு அர்ஜுன் படத்துக்கு இவர்தான் மியூசிக்கா? பிளாஸ்ட்டா இருக்கே!

பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…

45 minutes ago

இந்த படத்தை தடை செய்ய வேண்டும்! சட்டசபையில் எழுந்த விவாதம்- இப்படி எல்லாம் நடந்திருக்கா?

தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…

2 hours ago

சுயமரியாதை இருந்தால் ஆளுநர் மாளிகையைவிட்டு வெளியே போங்க : ஆர்எஸ் பாரதி காட்டம்!

தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…

3 hours ago

அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் முதல் காட்சி வெளிவராது- விநியோகஸ்தர்கள் திட்டவட்டம்

தயாராகி வரும் கொண்டாட்டங்கள் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…

4 hours ago

அமைச்சரின் சகோதரர் கொலை வழக்கில் போலி என்கவுண்டர் நடத்த பிளான் : சீமான் பகீர் குற்றச்சாட்டு!

திருச்சி நீதிமன்றத்தில் வருண் குமார் தொடுத்த வழக்கில் இன்று ஆஜராக வந்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.…

5 hours ago

This website uses cookies.