திண்டுக்கல் அருகே திமுக கட்சி அலுவலகத்தில் வேலை பார்க்கும் காமணன் என்பவர் கொலை மிரட்டல் விடுவதாகக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக 15 பேர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி மற்றும் திமுக கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார் பெயரைக் கூறி திமுக கட்சி அலுவலகத்தில் திமுக பிரமுகர் காமணன் வேலை பார்த்து வருகிறார்.
இவர், பெரியகோட்டை பஞ்சாயத்து வன்னிய பாறைப்பட்டியில் முப்பதிற்கும் மேற்பட்ட குடும்பம் வசிக்கும் பகுதிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர விடாமல் தடுப்பதாகவும், இதனை காவல் நிலையத்திற்கு, கோர்ட்டிற்க்கும் கொண்டு சென்றால் கொலை செய்துவிடுவதாக கொலை மிரட்டல் விடுவதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், வன்னிய பாறைப்பட்டி பகுதியை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் வளாகம் முன்பாக மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர். காவல் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இதனால் மாவட்ட ஆட்சியர் வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.
இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை:…
அருப்புக்கோட்டையில், கள்ளக்காதலில் இருந்த கணவரை வெறுப்பேற்ற வீடியோ கால் பேசி மனைவி வெறுப்பேற்றிய நிலையில், கணவர் கொலை செய்யப்பட்டுள்ளார். விருதுநகர்:…
டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது, தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது என மாநில நிதிநிலை அறிக்கை குறித்து தமிழக பாஜக தலைவர்…
ED சோதனையை சட்ட ரீதியாக டாஸ்மாக் நிர்வாகம் எதிர்கொள்வோம் என மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.…
நடிகை சினோக தனக்கான தனியிடத்தை தமிழ் சினிமாவில் பெற்றுள்ளார். சமீபத்தில் விஜய்யுடன் கோட் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.…
நயன்தாரா அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்கிறார். ஏராளமான படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர் தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம்…
This website uses cookies.