திண்டுக்கல் அருகே திமுக கட்சி அலுவலகத்தில் வேலை பார்க்கும் காமணன் என்பவர் கொலை மிரட்டல் விடுவதாகக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக 15 பேர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி மற்றும் திமுக கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார் பெயரைக் கூறி திமுக கட்சி அலுவலகத்தில் திமுக பிரமுகர் காமணன் வேலை பார்த்து வருகிறார்.
இவர், பெரியகோட்டை பஞ்சாயத்து வன்னிய பாறைப்பட்டியில் முப்பதிற்கும் மேற்பட்ட குடும்பம் வசிக்கும் பகுதிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர விடாமல் தடுப்பதாகவும், இதனை காவல் நிலையத்திற்கு, கோர்ட்டிற்க்கும் கொண்டு சென்றால் கொலை செய்துவிடுவதாக கொலை மிரட்டல் விடுவதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், வன்னிய பாறைப்பட்டி பகுதியை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் வளாகம் முன்பாக மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர். காவல் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இதனால் மாவட்ட ஆட்சியர் வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.
சன் பிக்சர்ஸ் சன் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான சன் பிக்சர்ஸ் பல பிரம்மாண்ட திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. சன்…
கவுண்ட்டர் மணி… கோலிவுட்டில் கவுண்ட்டர் வசனத்திற்கென்றே பெயர் போனவர் கவுண்டமணி. இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு நாடக நடிகராக பல…
விஜய் டிவியில் ஆன்கராக நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே, கொஞ்ச கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தார். இதையும்…
தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தவறான கருத்துக்களை பரப்பியிருந்தார். தர்பூசணி பழத்தல் ரசாயணம் உள்ளது…
லோகேஷ் பட ஹீரோ லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின்…
கராத்தே பாபு “ஜீனி” என்ற திரைப்படத்தை தொடர்ந்து ரவி மோகன் தற்போது நடித்து வரும் திரைப்படம் “கராத்தே பாபு”. இத்திரைப்படத்தில்…
This website uses cookies.