தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான கீதா ஜீவன், திமுக கட்சியினரை மதிக்காமல் ஒருமையில் பேசி வருவதால், அவரின் கீழ் பணிபுரிய விருப்பம் இல்லாததை தொடர்ந்து திமுக வட்டச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக வட்ட செயலாளர் கீதா செல்வ மாரியப்பன் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி பத்ரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கீதா செல்வ மாரியப்பன். இவர் காவல் துறையில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்ற இவர், திமுகவில் இளைஞர் அணியில் பதவி வகித்து வந்த நிலையில், தற்போது 39வது வட்டச் செயலாளராகவும், தூத்துக்குடி மேலூர் பத்திரகாளி அம்மன் கோவில் அறங்காவல் குழு தலைவராகவும் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், நேற்று கீதா செல்வ மாரியப்பனை மேலூர் பத்திரகாளியம்மன் அறங்காவல் குழு தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்து அறநிலையத்துறை உத்தரவிட்டது. இதையடுத்து, தனது பதவியை ஏன் பறித்தீர்கள் என்று அமைச்சர் கீதா ஜீவனை சந்தித்து கேட்பதற்காக வட்டச்செயலாளர் கீதா செல்வ மாரியப்பன் தூத்துக்குடி மாவட்ட திமுக அலுவலகம் சென்றுள்ளார். அப்போது அங்கே இருந்த அமைச்சர் கீதா ஜீவன், கீதா செல்வ மாரியப்பனை கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, இன்று செய்தியாளர்களிடம் கீதா செல்வ மாரியப்பன் கூறுகையில், “அமைச்சர் கீதா ஜீவன் தன் மீது வந்த புகாரை முறையாக விசாரிக்காமல், அறங்காவல குழு தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டதாகக் கூறினார்.
மேலும், என்னை போன்ற ஆரம்ப கால திமுக விசுவாசிகளை உரிய முறையில் மதிக்காமல் ஒருமையில் பேசி வருவதாகவும், கட்சிக்காரர்கள் பார்க்க சென்றால், உட்கார்ந்து கொண்டு தங்களை உட்காரக்கூட சொல்லாமல் அவமதிப்பதால், அமைச்சர் கீதாஜீவன் மாவட்ட செயலாளராக இருப்பதால், அவரின் கீழ் பணிபுரிய விருப்பமில்லை. எனவே எனது வட்ட செயலாளர் பதவியை ராஜினாமா செய்கிறேன், என அவர் தெரிவித்தார்.
ஹைதராபாத்தை சேர்ந்த சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிகர் மகேஷ்பாபு நடித்திருந்தார். இதையும்…
சர்வதேச சந்தையில் நிலவும் விலை பொறுத்தே தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே…
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
This website uses cookies.