மக்களின் இந்த குறிப்பிட்ட கனவைத் தகர்த்து விட்டது: லஞ்ச ஊழலை அதிகாரப் பூர்வமாக செய்யும் திமுக: அண்ணாமலை குற்றச்சாட்டு…!!

Author: Sudha
5 August 2024, 3:24 pm

வீட்டு வரைபட அனுமதி வழங்குவதை எளிதாக்குவோம் என்று வாக்குறுதி வழங்கிய திமுக, அரசு சென்னையில், 1,000 சதுர அடி இடத்துக்கு, அனுமதி வழங்க சுமார் 40,000 ரூபாய் ஆக இருந்த தொகையை ரூ 1,00,000 ஆக ஆக்கியிருப்பதுதான் எளிமையாக்குவதா? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் என அனைத்துப் பகுதிகளிலும், இந்த சுயசான்று அடிப்படையிலான வரைபட அனுமதிக் கட்டணம் இரண்டு மடங்குக்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது.அதிகக் கட்டணம் செலுத்தினால், கட்டிட வரைபடம் சரிபார்த்தல், கட்டிடம் கட்டப்படும் இடத்தை நேரில் சென்று பார்வையிடல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளாமல் உடனேயே அனுமதி தருவோம் என்றோ அல்லது, குறைந்த கட்டணம் செலுத்தினால், அனுமதி வழங்கத் தாமதமாக்குவோம் என்றோ கூறுகிறதா திமுக அரசு?என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் ஏற்கனவே, காலதாமதமின்றி குறித்த நேரத்தில் வரைபட அனுமதி பெறப் பலதரப்பினருக்கும் கமிஷன் கொடுக்கும் நிலை இருப்பதாகத் தெரிகிறது. இந்த நிலையில், சுயசான்று அடிப்படை என்று கூறி லஞ்ச ஊழலை அதிகாரப் பூர்வமாக்கியிருக்கிறது திமுக அரசு என்று பேசியிருக்கிறார்.

ஆட்சிக்கு வந்ததில் இருந்து, சொத்து வரி, பதிவுக் கட்டணம், கட்டுமான பொருள்கள் விலை என அனைத்தையும் உயர்த்தி, பொதுமக்களின் சொந்த வீடு கனவை திமுக அரசு தகர்த்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்

  • திடீரென மொட்டையடித்த சுந்தர்.சி.. ரூ.1 லட்சம் நன்கொடை.. விறுவிறுப்படையும் மூக்குத்தி அம்மன் 2!