சேலம் : சட்டப்பேரவை தேர்தலில் வாக்காளித்த வாக்காளர்களுக்கு திமுக நாமம் போட்டுவிட்டதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 7ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒருபகுதியாக, தனது சொந்த மாவட்டமான சேலத்தில், வாழப்பாடி பேரூராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி திமுக அரசை கடுமையாக விமர்சித்தும், அதிமுக அரசின் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் சாதனைகள் பற்றியும் பட்டியலிட்டு பேசினார்.
அவர் பேசியதாவது :- திமுகவின் 9 மாத ஆட்சி இருண்ட காலம். திமுக ஆட்சியில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை சம்பவங்களால் சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. நீட் தேர்வு ரகசியத்தை வைத்து கொண்டு அதிமுகவை ஏன் கூட்டத்திற்கு அழைக்கிறீர்கள்..? கொடுத்த வாக்குறுதி பற்றி கேட்கும் மக்களுக்கு திமுக நாமம் போட்டுவிட்டது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை போலீசாரே மிரட்டுகின்றனர். கீழே இருக்கும் சக்கரம் ஒருநாள் மேலே வரும். அப்போது, ஜனநாயகத்திற்கு புறம்பாக செயல்படும் காவல்துறை அதிகாரிகள் அதற்கான பலனை அனுபவிப்பார்கள், எனக் கூறினார்.
ஸ்ட்ரெஸ் பஸ்டர் பெரும்பாலான தமிழ்நாட்டு மக்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக விளங்கும் நிகழ்ச்சிதான் “குக் வித் கோமாளி”. 2019 ஆம் ஆண்டு…
கார்த்திக் சுப்பராஜ்-சூர்யா கூட்டணி கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளைக்கு வருங்கால மனைவியின் உல்லாச வீடியோ அனுப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம்…
வடிவேலு-சுந்தர் சி கம்பேக் கிட்டத்தட்ட 15 வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சியும் வடிவேலுவும் இணைந்து நடித்து இன்று உலகம்…
கோவை கார்ட்டூர் காவல் துறையினர் இன்று காலை 5 மணி அளவில் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.…
எல்லாம் ஸ்பாட்ல வர்ரது பொதுவாக ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் காட்சியை படமாக்க ஸ்கிரிப்ட் படி செல்வதுதான் வழக்கம். பெரும்பாலும் பல…
This website uses cookies.