அதிமுக எடுத்த அதிரடி முடிவை கண்டு திமுக மிரண்டு போயுள்ளது… முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!!
ஒரே நாடு ஒரே தேர்தல் அறிமுகப்படுத்தப்படுவது குறித்து கருத்து தெரிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பலிகடா ஆகப்போவது தெரியாமல் அதனை ஆதரித்துள்ளது என்று கூறி உள்ளார்.
இதற்கு பதிலளித்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் , அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்கள். தி.மு.க. மிரண்டு போய் இருப்பதையே மு.க.ஸ்டாலினின் பேச்சு உணர்த்துகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது காலத்தின் கட்டாயமாகும். நேர விரயம், மனித சக்தி வீணடிப்பது இதையெல்லாம் கருத்தில் கொண்டே முடிவை எடுத்துள்ளனர்.
சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்துக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் செலவினங்கள் குறையும். இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் மத்திய அரசு இதுபோன்ற முடிவை எடுத்துள்ளது. 1982-ல் இருந்தே ஒரே தேர்தல் கோஷம் இருந்து வருகிறது.
மத்திய அரசின் திட்டங்களுக்கு பல்வேறு மாற்றங்களுக்கு பிறகு அனுமதி அளித்துள்ளோம். அந்த வகையில்தான் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை ஆதரித்தோம். இதை வரவேற்பதில் தி.மு.க. வுக்கு என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.