பழனி அருகே உள்ள வரதமாநதி அணையின் தடுப்பு அணையாக உள்ள அணைக்கட்டு ஒன்றுக்கான ஷட்டர் பழுதடைந்த நிலையில் சீரமைப்பது மற்றும் இதர பணிகளுக்கான ஏலம் இன்று பழனி பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலத்தில் நடைபெறுவதாக இருந்தது.
இதற்காக சேலம், ஒட்டன்சத்திரம், ஈரோடு உள்ளிட்ட தமிழகம் முழுவதும் இருந்து 20-க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் வந்திருந்தனர். இதற்காக இன்று மாலை 3 மணியுடன் டெண்டர் பெட்டியில் ஒப்பந்தங்கள் போடுவது கடைசி நேரம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பழனி பகுதியை சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் கருப்புசாமி தலைமையிலான திமுக உள்ளிட்ட கட்சியினர், வெளியூரில் இருந்து வந்திருந்த ஒப்பந்ததாரர்களை உள்ளே நுழைய விடாமல் தடுத்தனர்.
போலீசார் முன்னிலையிலேயே அலுவலகத்திற்குள் நுழைய முயன்ற ஒப்பந்ததாரர்களை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சிலர் உருட்டுக் கட்டைகளுடன் அவர்களை மிரட்டினர்.
மேலும் வெளியூர்களிலிருந்து வந்திருந்த ஒப்பந்ததாரர்கள் கார்களின் கண்ணாடிகளை உடைத்ததால் பெரும் பதட்டம் நிலவுகிறது. போலீசார் முன்னிலையிலேயே திமுக மற்றும் விசிக கட்சிகளை சேர்ந்த சிலர் தாக்குதலில் ஈடுபட்டது பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.