இடப்பிரச்சனை தொடர்பாக கேள்வி எழுப்பிய நபரை திமுக வழக்கறிஞர் மண்வெட்டி எடுத்து தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.
நெல்லை மாவட்டம் டவுன் மாதா கோவிலைச் சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவருக்கும் இடையே இடப்பிரச்சனை இருந்து வந்தது. இது தொடர்பான வழக்கு நெல்லை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இப்படியிருக்கையில், சர்ச்சைக்குரிய நிலத்தில் சங்கர் கட்டிடப் பணியை மேற்கொண்டு வந்திருந்தார். இதனை விக்னேஷ் தட்டிக் கேட்டுள்ளார். அப்போது, சங்கரும், அவரது நண்பருமான திமுக வழக்கறிஞர் நவ்ஷாத் ஆகியோர் விக்னேஷை கண்மூடித்தணமாக தாக்கியுள்ளனர்.
இருதரப்பினரிடையே ஏற்பட்ட கைகலப்பின் போது திமுக வழக்கறிஞர் நவ்ஷாத், மண்வெட்டி எடுத்து விக்னேஷை தாக்கியுள்ளார். இது தொடர்பாக அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவச் செய்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பள்ளிகளில் ஆங்கிலமும் குறைவாக கற்றுக் கொடுக்க வேண்டும் என திமுக கொள்கை வைத்துள்ளதாக பாஜகவின் ராம சீனிவாசன் கூறியுள்ளார். திருச்சி:…
பாஜகவின் கலை, கலாசார பிரிவின் மாநிலச் செயலாளராக இருந்த ரஞ்சனா நாச்சியார், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளில் இருந்து…
சென்னையில், சீமானின் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசத் திட்டமிட்டதாக தபெதிகவினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை: கடந்த…
2 வருடமாக நடிகை ராஷி கண்ணாவுடன் பழகி வருவதாகவும், அவர் சத்தியம் செய்து கொடுத்ததை பிரபல நடிகராக ஓபன் கூறியுள்ளார்.…
சென்னையில், இன்று (பிப்.25) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 20 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 75 ரூபாய்க்கு…
This website uses cookies.