திமுக., வினரின் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிடுவது மக்களின் எண்ணத்தை திசைதிருப்பும் செயல் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு அமைந்துள்ள டாக்டர். அம்பேத்கர் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் மேயர் மகேஷ் ஆகியோர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ் கூறும் போது, பி.ஜே.பி., ஊழல் குறித்து பேச சற்றும் தகுதி இல்லாத கட்சி எனவும், நீரவ் மோடி முதல் அதானி வரையிலும் பலருக்கு துணை போகும் கட்சி, பாலியல் குற்றங்கள் உட்பட பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடைய நபர்களை வைத்துக்கொண்டு இவர்கள் ஊழல் குற்றச்சாட்டு கூற தகுதி அற்றவர்கள் எனக் கூறினார்.
திமுக வினரின் சொத்துப்பட்டியலை வெளியிடுவது மக்களின் எண்ணத்தை திசைதிருப்பும் செயல் என்றும், பா.ஜ.க., வின் ஊழல் பட்டியல் சந்தி சிரிக்கும் அளவிற்கு மக்களுக்கு தெரியும், என கூறினார்.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.