சேலம் மாவட்டம் எடப்பாடியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டத்திற்கு திமுக ஆட்சியில் எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை நிறுத்துவது தான் திமுக ஆட்சியின் சாதனை. இதை தவிர வேறு எதையும் செய்யவில்லை, திமுக ஆட்சியில் கல்லூரிகளுக்கு மூடுவிழா நடத்தப்படுகிறது.
இந்த ஆட்சி லஞ்சத்தின் உச்ச நிலைக்கு சென்றுவிட்டது. இன்றைக்கு எந்த துறையிலும் லஞ்சம் இல்லாமல் மக்கள் ஒன்றும் செய்யமுடியாது. அந்தவகையில், எதற்கெடுத்தாலும் லஞ்சம் தான், இந்த ஆட்சியில் இருந்து வருகிறது என விமர்சித்தார். இதன்பின் பேசிய இபிஎஸ், அதிக காலம் அமைச்சராக இருந்தவர், மூத்த தலைவர், திமுக பொதுச்செயலாளராக இருக்கும் துரைமுருகன் உடல்நலம் பாதிக்கப்பட்ட அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது இத்தனை அமைச்சர்கள் செல்லவில்லை, ஒரு சிலர் மட்டுமே சென்று பார்த்தனர்.
ஆனால், இன்றைக்கு ஒரு வருடத்தில் 5 கட்சிக்கு மாறியவர் செந்தில் பாலாஜியை பார்க்க ஏன் இத்தனை அமைச்சர்கள் சென்றார்கள், ஊழல் தான். ஊழல் செய்து அதிகமான நிதியை கொடுத்தவர் செந்தில் பாலாஜி. மதுபானம் மூலம் ஒரு பாட்டீலுக்கு 10 ரூபாய் அதிகம் வைத்து, ஒரு நாளைக்கு 10 கோடி என்று விஞ்ஞான முறைப்படி ஊழல் செய்து வருகிறார்கள் என்று கூறிய இபிஎஸ், குடும்ப நலனுக்கே திமுக அரசு முன்னுரிமை தருகிறது எனவும் விமர்சித்தார்.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.