சுதந்திர தினத்தையொட்டி தேசிய கொடியை ஏற்றிய போது, திடீரென அறுந்து விழுந்ததால் ஆத்திரமடைந்த திமுக எம்எல்ஏ, அருகிலிருந்தவரை அடிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் 77வது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் உள்ள செங்கோட்டையில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடியும், சென்னை கொத்தளத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலினும் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து உள்ளாட்சி மற்றும் அரசு அலுவலகங்களிலும் தேசிய கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.
அந்த வகையில் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நடந்த நிகழ்ச்சியில் கும்பகோணம் திமுக எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் தேசிய கொடி ஏற்றினார். அப்போது, எதிர்பாராத விதமாக, மேலே ஏற்றப்பட்டுக் கொண்டிருந்த தேசிய கொடி திடீரென அறுந்து விழுந்தது. இதனால், ஆத்திரமடைந்த எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன், அருகில் இருந்தவரை அடிக்க கையை ஓங்கிச் சென்றார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, தேசிய கொடி அறுந்து விழுந்ததால், அருகில் இருந்தவரை திமுக எம்எல்ஏ ஒருவர், அருகில் இருந்தவரை தாக்க முயன்ற வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.