நில அபகரிப்பு வழக்கில் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்ட நிலையில், அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
1982ல் நில நகர்ப்புற நில உச்சவரம்பு திட்டத்தின் கீழ் சென்னை குரோம்பேட்டையில் இயங்கி வந்த குரோம் லெதர் தொழிற்சாலை நிறுவனத்திற்கு சொந்தமான நிலத்தை தமிழக அரசு தன்வசப்படுத்தியது. இதனிடையே, 1995ம் ஆண்டில் அரக்கோணம் தொகுதி திமுக எம்பியாக இருந்த ஜெகத்ரட்சகன், அந்த நிறுவனத்தின் பங்குகளை தனது அதிகாரத்தின் மூலமாக முறைகேடாக வாங்கியதாகவும், அதேபோல 178 ஏக்கர் நிலத்தையும் பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகளின் ஒத்துழைப்போடு போலி ஆவணங்களை தயாரித்து அபகரித்தாகவும் கூறப்படுகிறது.
மேலும், அந்த இடங்களை வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்ததில் சுமார் 1700 கோடி ரூபாய் அளவில் லாபம் சம்பாதித்து இருப்பதாக டாவ்சன் என்பவர் சிபிசிஐடி போலீசாரிடம் புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கையில் காவல்துறையினர் தீவிரமாக இறங்கி இருந்த நிலையில், வழக்கினை ரத்து செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெகத்ரட்சகன் மனு தாக்கல் செய்திருந்தார். கடந்த 2022 நவம்பர் மாதம் இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை ரத்து செய்தது.
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து டாவ்சன் தற்போது உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். ஜெகத்ரட்சகன் மீதான குற்றச்சாட்டு என்பது மிகப்பெரியது என்றும், இது தொடர்பாக ஆவணங்கள் இருந்தும் சென்னை உயர்நீதிமன்றம் அதனை கருத்தில் கொள்ள தவறிவிட்டதாகவும் கூறியிருந்தார்.
இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிகிறது.
ரஜினிக்கு நிகர் வேற யாரும் இல்லை.! ரஜினியின் மேக்கிங் வீடீயோவை சீக்கிரமாக ரிலீஸ் பண்ணுங்க,பல பேருக்கு அது உதவும் என…
பிசிசிஐ புதிய விதிகள் ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் வீரர்களுக்கும்,அணி நிர்வாகத்திற்கும் பிசிசிஐ பல புதிய விதிமுறைகளை விதித்திருப்பது…
பேட்டக்காரனாக நடிக்க இருந்த பார்த்திபன் தமிழ் திரையுலகில் தனுஷ் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறார்.தற்போது…
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் நடந்த நிகழ்வுகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பட்டியலிட்டுள்ளார். இது குறித்து…
திருச்சி பாஜக கட்சி அலுவலகத்தில் இன்று பிற்பகல் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அதில், ராஜீவ்…
பட வேலையை கையில் எடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும்,தனுஷின் முன்னாள் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சினிமா…
This website uses cookies.