பிரேமலதாவை நேரில் சந்தித்த திமுக எம்பி கனிமொழி… வீட்டுக்கே சென்று விஜயகாந்த் மகனுக்கு ஆறுதல்!
விஜயகாந்த் மறைந்த தருணத்தில், மழை வெள்ளத்தால் கடுமையான பாதிப்பை சந்தித்த தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களுக்கு நிவாரண உதவி வழங்குவதில் மும்முரமாக இருந்தார் கனிமொழி.
அங்கிருந்தவாறே விஜயகாந்த் மறைவுக்கு இரங்கலும் அவர் குறித்த பழைய நினைவலைகளையும் கனிமொழி பகிர்ந்துகொண்டார். குறிப்பாக வேலை தேடி வரும் யாராக இருந்தாலும் கைவிடாதவர் விஜயகாந்த் என்றும் 75 பேருக்கு அவரது ஆஃபிஸில் வேலை தந்தவர் எனவும் கனிமொழி எம்.பி. புகழஞ்சலி செலுத்தினார்.
மேலும், தன் தாயார் ராஜாத்தி அம்மாள் மீது விஜயகாந்த் மரியாதை வைத்திருந்ததையும் அப்போது குறிப்பிட்டிருந்தார் கனிமொழி. சென்னை, தூத்துக்குடி, டெல்லி, என பிஸியாகவே ஓடிக்கொண்டிருந்த கனிமொழி, இன்று தனது தாயார் ராஜாத்தி அம்மாளை அழைத்துக் கொண்டு சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டுக்கு சென்றார்.
அங்கு பிரேமலதாவை சந்தித்து தனது துயரத்தை வெளிப்படுத்திய ராஜாத்தி அம்மாள், விஜயகாந்தின் ஆரம்பக்காலங்களில் அவர் கருணாநிதியோடு எந்தளவுக்கு நட்புறவு பேணினார் என்பது குறித்தெல்லாம் பழைய நினைவலைகளை பகிர்ந்திருக்கிறார்.
பிரேமலதா விஜயகாந்தும் தனது கணவருக்கு என்னாச்சு, என்ன சிகிச்சைகள் வழங்கப்பட்டது, என்பது குறித்தெல்லாம் ராஜாத்தி அம்மாளிடமும் கனிமொழியிடமும் எடுத்துக் கூறியிருக்கிறார். இந்தச் சந்திப்பின் போது விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனும் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.