வாரிசு குறித்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சொல்லக்கூடாது என தூத்துக்குடியில் கனிமொழி எம்பி தெரிவித்தார்.
நேற்று ஆன்லைன் ரம்மி தடை சட்டம் காலாவதி ஆனது குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு திமுக எம்பி கனிமொழி பதிலளித்ததாவது;- கவர்னர் பதவி காலாவதியானது என்று நாங்கள் தொடர்ந்து சொல்லி வருகிறோம். அது இல்லை என்றால் ஆன்லைன் ரம்மியை ஒழித்து இருப்போம். கவர்னர் பதவி தேவையில்லாத ஒன்று. கவர்னர் இல்லை என்றால் பல சிக்கல்கள் தீர்ந்து விடும். எதற்காக ஆன்லைன் ரம்மி தடையை பாதுகாக்க துடிக்கிறார்கள் என தெரியவில்லை, என கூறினார்.
இதற்கு பதிலடி கொடுத்த புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், “தகுதியை வைத்துதான் ஆளுநர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். வாரிசு அடிப்படையில் இல்லை; விமர்சனங்களை தவிர்க்க வேண்டும்,” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், எட்டையாபுரம் ரோடு ஏவிஎம் கமல்வேல் மஹால் புத்தக திருவிழாவில் கனிமொழி எம்பி கலந்து கொண்டார். முன்னதாக, செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘தகுதியை வைத்துதான் ஆளுநர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். வாரிசு அடிப்படையில் இல்லை என தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியது குறித்து கேட்டதற்கு, ‘அவங்க அதெல்லாம் சொல்லக்கூடாது,’ என தெரிவித்தார்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.