திமுக எம்பி கனிமொழியின் பிறந்த நாளையொட்டி நாமக்கல்லில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் திமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி இன்று தனது 55வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் திமுக எம்.பி.கனிமொழி தனது பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இதனிடையே, கனிமொழியின் பிறந்த நாளை திமுகவினரும் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். கனிமொழியை பாராட்டி போஸ்டர்களும் ஆங்காங்கே ஒட்டப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நாமக்கல்லில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்ட துணை அமைப்பாளரும், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையைச் சேர்ந்த எம்எல்ஏ கே.மோகன் ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள அந்தப் போஸ்டரில், ‘புறம் காத்தது போதும், அகம் காக்க வா.’. எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, பின்புறத்தில் தலைமை செயலகம் இருப்பது போன்றும், அண்ணா, பெரியா, கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் அவரை இருக்கையில் அமர வைப்பது போன்றும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. கனிமொழியின் மேஜையில், ‘கனிமொழி கருணாநிதி, அமைச்சர்’ எனப் பொரிக்கப்பட்டுள்ள பெயர் பலகையும் வைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், கனிமொழியை அமைச்சராக்க வேண்டும் என்ற கோரிக்கை திமுக தரப்பில் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே, திமுகவில் கனிமொழி ஓரங்கட்டப்படுவதாக அரசல்புரசலாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், அண்மையில் முதலமைச்சர் ஸ்டாலினின் மகனும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக்கப்பட்டுள்ளார். இதன்மூலம், ஸ்டாலினுக்கு அடுத்து தலைமை பொறுப்பை உதயநிதி ஏற்பார் என்று சொல்லப்படுகிறது.
இப்படியிருக்கையில், திமுகவின் எம்பியாக இருக்கும் கனிமொழியை அமைச்சராக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து இருப்பது, உதயநிதிக்கு போட்டியாக அவரை தமிழக அரசியலில் ஈடுபடுத்த வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் விரும்புவதாக தெரிகிறது. இது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
2024ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் போதுதான், கனிமொழி மீண்டும் டெல்லி அரசியலில் களம் காண்பாரா..? அல்லது ஆதரவாளர்களின் விருப்பப்படி, தமிழக அரசியலில் கவனம் செலுத்துவாரா..? என்பது தெரிய வரும்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.