பாஜகவுடன் பாமக கூட்டணி சேர்ந்திருப்பதை திமுக எம்பி செந்தில் குமார் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் பாமக எந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்கும் என்ற எதிர்பார்ப்பும், கேள்வியும் இருந்து கொண்டே வந்தது. காரணம், அதிமுகவும், பாஜகவும் தங்கள் பக்கம் பாமகவை இழுக்க முழு முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். இந்த சூழலில், அதிமுக கூட்டணியில் பாமக இணைய இருப்பதாக தகவல் வெளியான நிலையில், திடீர் திருப்பமாக, பாஜவுடன் கூட்டணியை உறுதி செய்தது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பல்வேறு இழுபறிகள் மற்றும் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, விழுப்புரம் தைலாபுரத்திலுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லத்தில் பாஜக – பாமக இடையிலான நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. கூட்டணி ஒப்பந்தத்தில் பாமக பத்து தொகுதிகளில் போட்டியிடுவதாக கையெழுத்திடப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து, பேட்டியளித்த பாமக தலைவர் அன்புமணி, நாட்டின் நலன் கருதியும் மோடி நல்லாட்சி தொடரவும் தமிழ்நாட்டில் மாற்றங்கள் தொடர இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பின்னர், சேலத்தில் நடைபெற்ற பாஜக பிரச்சார பொதுக்கூட்டத்தில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸும் பிரதமர் மோடியுடன் மேடையை பகிர்ந்து கொண்டனர்.
பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்ததை பல்வேறு தரப்பினர் விமர்சித்து வரும் நிலையில், திமுக எம்பி செந்தில் குமாரும், கிண்டலடித்து X தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், “கோடை கால மருத்துவ அட்வைஸ்: இயற்கையாக பழுக்கும் #மாம்பழத்தை பருகுங்கள். செயற்கையாக பழுக்க வைக்கப்படும் பழத்தினை கேடு விளைவிக்கும் என்ற அடிப்படையில் தவிர்ப்பது நன்று,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
உறவுகள் தான் முக்கியம் நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார்,சிறு வயதிலிருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்பதில் உறுதியாக…
படத்தின் மீது அதிகரிக்கும் எதிர்ப்பு இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில்,அறிமுக இயக்குநர் பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள…
ரஜினியிடம் ஆசி வாங்கிய ஐசரி கணேஷ் 2020ஆம் ஆண்டு வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் சுந்தர்.சி…
பின்னணி பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணியின் வாரிசுதான் சாய் அபயங்கர். இவர் ஆல்பங்களுக்கு இன்றைய கால இளசுகள் அடிமை. இவர்…
வீடு என்னுடைய பெயரில் இல்லை நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த்,அவரது மனைவி அபிராமியுடன் இணைந்து ஈசன்…
5 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு தமிழ் மற்றும் கன்னட திரைப்பட நடிகையுமான சஞ்சனா கல்ராணி, 2020ஆம் ஆண்டு போதைப்பொருள் வழக்கில்…
This website uses cookies.