இருக்கை முறையாக ஒதுக்கப்படவில்லை எனக் கூறி, திமுக எம்பி எம்எம் அப்துல்லா, குடியரசு தினவிழாவை புறக்கணித்து, பாதியில் வெளியேறியதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் 73வது குடியரசு தினவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, சென்னையில் ஆளுநர் ஆர்என் ரவி தேசிய கொடியேற்றி ஏற்றி, மரியாதை செலுத்தினர். மேலும், மாவட்டந்தோறும் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் தேசிய கொடியேற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், புதுக்கோட்டையில் நடைபெற்ற குடியரசு தின விழாவை திமுக எம்பி எம்.எம். அப்துல்லா புறக்கணித்ததாக கூறப்படுகிறது. விழாவில் தனக்கு முறையான இருக்கை ஒதுக்கப்படவில்லை என குற்றம்சாட்டி விழாவை புறக்கணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுக்கோட்டையில் நடைபெறும் குடியரசுத் தின விழாவை திமுக எம்.பி எம்.எம். அப்துல்லா புறக்கணித்து சென்றதாக தகவல் வெளியான நிலையில், தனக்கு இருக்கை முறையாக ஒதுக்கப்படவில்லை என்று கூறி கொடியேற்றும் முன்பே பாதியில் அங்கிருந்து வெளியேறியதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக திமுக எம்பி அப்துல்லாவை தொடர்புகொண்டு கேட்டபோது, தனக்கு முக்கியமான பணி இருப்பதாலேயே கிளம்பியதாக கூறினார். அதேவேளையில், தேசிய கொடிக்கு மரியாதை செலுத்துவதை காட்டிலும் திமுக எம்பி முக்கியமான வேலை என்று எதனை குறிப்பிடுகிறார் என்ற கேள்வி எழுப்பி வருவதுடன், மக்கள் பிரதிநிதியான திமுக எம்பி தேசிய கொடியை அவமதித்து விட்டதாகவும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.