மதுரையில் திராவிட கழகத்தின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில், கையை வெட்டுவேன் என திமுக எம்பி டிஆர் பாலு பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் பழங்காநத்தம் பகுதியில் திறந்தவெளி மாநாடு நடத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பேசிய திராவிட கழகத்தின் தலைவர் கி.வீரமணி, தென் மாவட்ட மக்களுக்கு நன்மை அளிக்கும் சேது சமுத்திர திட்டத்தை வேண்டுமென்றே சிலர் திட்டமிட்டு தடுத்து விட்டதாகவும், ராமரின் பெயரைக் கூறி தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற முடியாது என்றும் பேசினார்.
இந்த மாநாட்டில் திமுக பொருளாளரும், எம்.பி.யுமான டி.ஆர்.பாலு பேசியதாவது :- சேது சமுத்திர திட்டம் நிறைவேறியிருந்தால், சுமார் 70 சதவிகித கப்பல்கள், அந்த கால்வாய் வழியாக சென்றிருக்கும். மேலும், ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி வருவாய் ஈட்டும் சேது சமுத்திர திட்டத்தை தடுத்தவர்கள் நன்றாகவே இருக்க மாட்டார்கள்.
தனது கட்சி தலைவரை சீண்டினாலோ, அய்யா வீரமணி மீது கைவைத்தாலோ அவனது கையை வெட்டுவேன், கையை வெட்டுவது தான் நியாயம், தர்மம். நியாயம் இல்லைன்று சொல்லலாம், அதை கோர்ட்டுல போய் சொல்லுங்க, என்று கூறினார்.
ஏற்கனவே, திமுக அமைச்சர்கள் அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கி வரும் நிலையில், திமுக எம்பி டிஆர் பாலுவின் இந்த பேச்சு திமுக தலைமைக்கு மேலும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.