பொய் தேவையில்லாத கருத்துகளை தமிழ்நாட்டில் பரப்புவது தான் அண்ணாமலையின் வேலை என்றும், பெரியாரின் சிலை அகற்றப்பட்டால் மத்தியில் இருந்து பாஜக அகற்றப்படும் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.
நீட் ஒழிப்பு கையெழுத்து நிகழ்வானது வடசென்னை திருவொற்றியூர் தேரடி பகுதியில் இன்று நடத்தப்பட்டது. திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி கலந்து கொண்டு நீட் தேர்விற்கு எதிராக தனது கையெழுத்தை பதிவிட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது :- அண்ணாமலை பொய் சொல்வது, தேவை இல்லாத கருத்தை தமிழ்நாட்டில் பேசுவது அவரது தொழில். பெரியார் கல்வெட்டை அகற்றினால் இவர்கள் மத்தியில் இருந்து அகற்றபடுவார்கள் என்பது உறுதி. பெரியாரின் கருத்துகள் உலகம் முழுதும் பேசும் நிலையில், இந்த கருத்தை அழிப்பவர்கள் தான் அழிந்து போய் இருக்கிறார்கள்.
சோனியா காந்தி, பிரியங்கா காந்தி போன்றோரே பெரியாரின் கருத்துகளை பிரச்சாரத்தில் மேற்கொள்கிறார்கள். சிங்கப்பூரில் பேசிய மயில்சாமி அண்ணாதுரையும், பெரியார் தான் சந்திர மண்டலத்தில் முதன்முதலில் தண்ணீர் இருப்பதை உணர்த்தியவர் என்றும், அறிவூட்டியர் பெரியார் என்றும் பேசினார்.
மயில்சாமி அண்ணாதுரை விஞ்ஞானி பேசிவிட்டபோது, அண்ணாமலைக்கெல்லாம் இதை தான் சொல்ல விரும்புகிறேன். பெரியார் சிலையை எடுத்துவிட்டு திருவள்ளுவர் சிலை வைப்போம் என அண்ணாமலை பேசியது தமிழ்நாட்டு மக்களை திசைதிருப்புவது. முதன்முதலில் வள்ளுவருக்கும், பெரியாருக்கும் சிலை வைத்தது நாங்கள் தான்.
எங்கெல்லாம் பெரியார் சிலை உள்ளதோ, அங்கெல்லாம் வள்ளுவர் சிலையும், எங்கெல்லாம் வள்ளுவர் சிலை உள்ளதோ அங்கெல்லாம் பெரியார் சிலையும் நாங்கள் வைப்போம். மே மாதத்திற்கு பிறகு ஆட்சியில் இருந்து பாஜக வெளியேற போகிறது. இந்தியா கூட்டணி தான். மேலும், நாகலாந்து மக்கள் குறித்த தமது கருத்தில் பேனை பெருமாளாக ஆக்கி, அதை பிரச்சனையாக்குவது என்று ஆளுநர் ரவியும், பாஜகவும் நினைக்கின்றது. அந்த மாநில மக்கள் தெளிவாகவே இருக்கிறார்கள்.
நீட்தேர்வு ரத்து கையெழுத்து இலக்கு என்பது அரசியல் நாடகம் என சீமான் கூறிய கருத்து குறித்து பேசிய பாரதி, சீமான் ஒருநாள் எங்களை ஆதரிப்பார், ஒருநாள் எதிர்ப்பார் என பேசினார்.
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது “குட் பேட் அக்லி” திரைப்படம். ரசிகர்களின் மிகப்பெரிய…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று வெளியானது. ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி அத்தனை அம்சங்களும் படத்தில் உள்ளதால் ரசிகர்கள்…
தேசிய விருதுகளை குவித்த திரைப்படம்… வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “ஆடுகளம்”. மிகவும்…
வெளியானது குட் பேட் அக்லி… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம்…
வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே உள்ள பட்டியூர் பகுதியில் இருக்கும் சென்னை டு பெங்களூர் ரயில்வே தண்டவாளத்தின் அருகே உள்ள…
This website uses cookies.