பெரம்பலூர் தொகுதியில் களமிறங்கும் திமுக…அமைச்சரின் மகனுக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த அறிவாலயம்!!!
திமுக முதன்மைச் செயலாளரும், மூத்த அமைச்சருமான கே.என்.நேருவின் மகன் அருண் நேரு தற்போது முழு அரசியலில் குதிக்க போகிறார்.
அருண் நேருவை அரசியலுக்கு முழுமையாக இழுத்து வந்த அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள், அவரை எம்.பியாக்கி டெல்லிக்கு அனுப்பி வைக்க முயற்சித்து வருகின்றனர்.
திருச்சியை பொறுத்தவரை ஏற்கனவே அமைச்சர்கள் அன்பில் மகேஷ், கே.என்.நேரு என மிகப் பெரிய இரண்டு பவர் செண்டர்கள் உள்ள நிலையில் அருண் நேருவையும் திருச்சியில் களமிறக்க திமுக தலைமை விரும்பவில்லை.
இதனால் தான் தனது சித்தப்பா மறைந்த ராமஜெயம் போட்டியிட விரும்பிய பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட அருண் நேருவும் ஆர்வம் காட்டி வருகிறார். தனது அப்பா நேருவை போலவே இப்போது கட்சியினர் இல்ல நிகழ்வுகளில் கலந்துகொள்வதோடு, திருச்சியில் இருந்தால் தினமும் அலுவலகம் சென்று பார்வையாளர்களையும் சந்திக்க ஆரம்பித்துள்ளார் அருண் நேரு.
முதலில் மகனை அரசியலுக்கு அழைத்து வர அமைச்சர் நேரு மிகவும் தயங்கினார். தன்னோடு அரசியல் போதும் என்று கூட நினைத்தார், ஏனெனில் அந்தளவுக்கு அவரது தம்பி ராமஜெயத்தின் மறைவு நேருவின் மனதை பாதித்திருந்தது.
ஆனால் ஆதரவாளர்கள் கொடுத்த அழுத்தத்தால் மகனின் அரசியல் வருகைக்கு நேரு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. பெரம்பலூர் தொகுதியை பொறுத்தவரை இதற்கு முன்னர் 2009-2014ல் அமைச்சர் நேருவின் அக்கா மகனும், நடிகருமான நெப்போலியன் போட்டியிட்டு வெற்றிபெற்று மத்திய இணை அமைச்சராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.