சென்னை : திமுக தொண்டனை செருப்பை எடுத்த வருமாறு திமுக பொருளாளர் டிஆர் பாலு கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மூத்த அமைச்சர் பொன்முடி, மகளிர் இலவச பேருந்து பயணத்தை ‘ஓசி’ என விமர்சித்தார். அதுமட்டுமின்றி கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், ‘பெண்ணொருவரை ஏய்… நீ உட்காரு,’ என ஒருமையில் பேசி அவமரியாதை செய்தார். இதைப் போல, அமைச்சர்கள் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகளும் சர்ச்சைக்குரிய வகையில் நடந்து கொண்டது திமுக தலைமைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், திமுக பொதுக்குழு கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தலைவர், பொருளாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தினார். அதாவது, நிர்வாகிகள் கட்சிக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது, பொதுமக்கள் மத்தியில் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என அறிவுரை கூறினார். மேலும், தினமும் காலையில் கண்விழிக்கும் போது, கட்சியினர் எந்த பிரச்சனையும் செய்து விடக் கூடாது என்று நினைத்துக் கொண்டுதான் விழிப்பதாகவும், பொதுமக்கள் மத்தியில் நடந்து கொள்ளும் கண்ணியமற்ற செயல்களால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டு வருகிறது, கட்சி கூனி குறுகி நிற்பதாகவும் அவர் கூறினார்.
முதலமைச்சர் ஸ்டாலின் இவ்வாறு பேசிக் கொண்டே இருக்கும் போதே, திமுக பொருளாளர் டி.ஆர் பாலு, கட்சி தொண்டர் ஒருவரை தனது செருப்பை எடுத்து வரக்கூற, அத்தொண்டரும் அவரின் செருப்பை கையில் எடுத்து வந்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பொதுக்குழு தொடக்கத்தில் பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்தனர். முன்னதாக, காலில் இருந்த செருப்பை கட்சியினர் கழற்றிவிட்டு மரியாதை செய்தனர். அதன் பிறகு அனைவரும் செருப்பை அணிந்து கொண்ட நிலையில், பொருளாளர் டி. ஆர் பாலு மட்டும் செருப்பு அணிய மறந்து மேடையில் இருக்கையில் அமர்ந்துகொண்டார்.
இதனை உணர்ந்த அவர், தனது தொண்டரிடம் செருப்பை எடுத்து வருமாறு கூற, அதனை கையில் எடுத்து வந்து அவரின் காலடியில் வைத்தார். இந்த சம்பவம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் அருகே 10ம் வகுப்பு மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த 12ம் வகுப்பு மாணவர் பிடிபட்ட நிலையில், மேலும்…
தமிழக மக்களுக்கு இதுமாதிரியான துரோகங்களை செய்துவிட்டு மும்மொழிக் கொள்கை பற்றி முதல்வர் பேசுவதாக பொ.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். கோயம்புத்தூர்: கோவை மாவட்டம்,…
வாரிசு நடிகையாக சினிமாவில் நுழைந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். மேனகாவின் மகளாக மலையாள சினிமாவில் நுழைந்த கீர்த்தி சுரேஷ்க்கு தமிழ்,…
சென்னையில், இன்று (பிப்.24) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 55 ரூபாய்க்கு…
ஆர்ஜேவாக இருந்து தனது கடின உழைப்பால் சினிமா பக்கம் வந்தவர் சீரியல் நடிகர் மிர்ச்சி செந்தில். சின்னத்திரையில் தொடர்ந்து ரசிகர்களை…
This website uses cookies.