2 மாநிலங்களுக்கு ஆளுநராக இருந்த தமிழிசையின் சொத்து மதிப்பு எவ்ளோ தெரியுமா? சொந்தமாக கார் கூட இல்லை.!!
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தமிழகத்தில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. ஆளுநராக இருந்த தமிழிசை சவுந்திரராஜன், பதவியை ராஜினமா செய்துவிட்டு தேர்தலில் களமிறங்குகிறார்.
பாஜக சார்பில் தென் சென்னையில் அவர் போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று தமிழகம் முழுவம் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
அந்த வகையில் தமிழிசை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தமிழிசையின் சொத்து பட்டியலையும் தனது வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் அவர் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் தனது சொத்து பட்டியலையும் இணைத்துள்ளார். அதில், தமிழிசை பெயரில் அசையும் சொத்து 1.57 கோடி எனவும், சொந்த வாகனம் இல்லையெனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தலா 10 லட்சம் மதிப்புள்ள பரிசோதனை இயந்திரம் மற்றும் ஸ்கேன் இயந்திரம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழிசை சௌந்தர்ராஜன் கணவர் பெயரில் மொத்தம் 3.92 கோடி அசையும் சொத்து உள்ளதாகவும், மகள் பெயரில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் அசையும் சொத்து உள்ளதாகவும் 4 கார்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழிசை சௌந்தரராஜன் பெயரில் 60 லட்சம் மதிப்பிலான அசையா சொத்துகளும், அவரது கணவர் சௌந்தரராஜன் பெயரில் 13.70 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளும், மகள் பெயரில் 70 லட்சம் மதிப்பிலான அசையா சொத்துக்களும் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழிசை பெயரில் 58 லட்சமும், அவரது கணவர் பெயரில் 3.35 கோடியும், மகள் பெயரில் 3.41 கோடியும் கடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.