பிரதமர் மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது நடைபெற்ற மதக்கலவரம் குறித்து ‘இந்தியா: மோடி கேள்விகள்’ என்ற ஓர் ஆவணப்படத்தை பி.பி.சி வெளியிட்டிருந்தது.
2002-ல் நடந்த குஜராத் கலவரம், அதைத் தொடர்ந்து நடைபெற்ற சம்பவங்களைக் குறிப்பிட்டு இரண்டு பாகங்களாக இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டிருந்தது.
இந்த ஆவணப்படத்துக்கு மத்திய அரசு தடைவிதித்திருக்கிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் மாணவ அமைப்புகள் போராட்டத்தை நடத்தின. இதேபோல, பொதுவெளியில் இந்த ஆவணப்படத்தைத் திரையிட முயற்சியும் செய்தன.
இந்த நிலையில் சென்னை, அண்ணாநகர் டி.பி.சத்திரத்திலுள்ள அம்பேத்கர் சிலை அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஒன்றுகூடி மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராகக் குரல் எழுப்பினர்.
இதில், சென்னை மாநகராட்சியின் 98-வது வார்டு சி.பி.எம் கவுன்சிலர் பிரியதர்ஷினியும் கலந்துகொண்டார். அப்போது, மத்திய அரசுக்கு எதிராகவும், `அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்போம்’ என்றும் முழக்கமிட்டனர். இதையடுத்து, சாலையில் அமர்ந்து தடைசெய்யப்பட்ட ஆவணப்படத்தைப் பார்த்தனர்.
தகவலறிந்து அங்கு விரைந்த டி.பி.சத்திரம் போலீஸார், தடைசெய்யப்பட்ட ஆவணப்படத்தைப் பார்த்ததற்காக கவுன்சிலர் பிரியதர்ஷினி உட்பட ஜனநாயக வாலிபர் சங்கத்தினரைக் கைதுசெய்தனர்.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.