ஆளுநர் கூடன்குளம் குறித்து அவர் பேசியதை மறைத்துவிட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், நேற்று தமிழக ஆளுநர் அவர்கள் பேசுகையில் கூடன்குளம் மற்றும் ஸ்டெர்லைட் போராட்டத்தில் வெளிநாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட நிதி மக்களை தூண்ட பயன்பட்டது என்று பேசியதற்காக திமுக வினரும், காங்கிரஸ் கட்சியினரும் குய்யோ முறையோ என்று கதறி கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் ஆளுநர் ஸ்டெர்லைட் போராட்டத்தை கொச்சைப்படுத்தி விட்டார் என்று குறிப்பிடுகிறார்களேயன்றி கூடன்குளம் குறித்து அவர் பேசியதை மறைத்துவிட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து ஆளுநர் பேசியது தவறு என்று கண்டிக்கிறார்கள். முதல்வர் மு.க.ஸ்டாலினும், மக்களவை உறுப்பினர் கனிமொழியும் திடீர் தமிழ் பாசம் வந்து துடிக்கின்றனர்.
தமிழக காங்கிரஸ் பிப்ரவரி 24, 2012 அன்று அன்றைய பிரதமர் மன்மோகன் சிங், இந்தியாவின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் கூடன்குளத்தில் போராட்டம் செய்பவர்களை அமெரிக்க என்ஜிஓக்கள் நிதி அளித்து தூண்டி விடுகிறார்கள் என்று கூறியதை மறந்து விட்டு இன்று நீலிக்கண்ணீர் வடிப்பது கடும் கண்டனத்திற்குரியது.
அதே போல் திமுக தலைவர் கருணாநிதியும், பிப்ரவரி, 29, 2012 அன்று கூடன்குளம் போராட்டத்திற்கு அமெரிக்க தொண்டு நிறுவனங்கள் தான் காரணம் என்று கூறியதையும், அதிமுக அரசு போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்று கூறியதையும் மு.க.ஸ்டாலினால் மறுக்க முடியுமா? அப்படியென்றால், கூடங்குளத்தில் போராடியவர்கள் தேசத்துரோகிகள் என்று சொல்கிறதா திமுக?
அமெரிக்க நிதியினால் தூண்டப்பட்டதால் தான் போராட்டம் நடைபெற்றது என்று ஏற்றுக்கொள்கிறாரா மு.க.ஸ்டாலின் அவர்கள்? எதிர்க்கட்சியாக இருந்தால் போராட்டக்காரர்கள் தேச பக்தர்கள் என்றும் ஆளும்கட்சியாக இருந்தால் போராட்டக்காரர்கள் தேச விரோதிகள் என்றும் முத்திரை குத்துவது மலிவான அரசியல் மட்டுமல்ல ஆபத்தான அரசியலும் கூட.
மன்மோகன் சிங் கூறினால் சரி, ஆர்.என்.ரவி கூறினால் தவறா? எந்த ஆதாரத்தை கொண்டு அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் கூடன்குளம் போராட்டத்தை தூண்ட வெளிநாட்டு நிதி தான் பயன்பட்டது என்று கூறினார் என்பதை அன்று மத்திய அமைச்சரவையில் இருந்த திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஒரு பக்கம் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் போக்கு காட்டி வரும் நிலையில், சாமானியர்களுக்கு அடுத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது மத்திய…
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பெருஞ்சேரியில் 19ஆம் தேதி சுமார் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்…
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியமான வந்திதா பாண்டேவை உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பற்றி…
எகிறிவரும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணி கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்துவிட்டார் அட்லீ. அவர் ஷாருக்கானை வைத்து இயக்கிய…
சினிமாவில் தொடர்ந்து ஜோடியாக நடித்தால் உடனே அவர்களுக்குள் காதல், கிசு கிசு என க்கு வைத்து பேசப்படுவது வழக்கம். ஆனால்…
This website uses cookies.