அதிமுகவை நேரடியாக எதிர்க்க தைரியம் இல்ல.. பணம், பிரியாணி கொடுத்து மக்களை அடைச்சு வெச்சிருக்காங்க : இபிஎஸ் பரப்புரை!

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி திமுக, அதிமுக போன்ற அரசியல் கட்சிகள் வேட்பாளரை நிறுத்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை ஆதரித்து முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார்.

அவர் வீரப்பாளையத்தில் பிரச்சாரத்தில் பேசிய போது தமிழகத்தில் உள்ள 25 அமைச்சர்களும் மக்கள் பணியை விட்டுவிட்டு ஈரோடு கிழக்கு முகாமிட்டுள்ளார்கள்.

இங்கு வந்து வடை சுடுவதும், டீ ஆற்றுவதும், புரோட்டா போடுவதுமாக இருக்கிறார்கள். இதெல்லாமா அமைச்சர்களின் வேலை? மக்களுக்கு நன்மை செய்வதை விட்டுவிட்டு இதென்ன வேலை? இன்று கூட நான் வரும் போது பார்த்தேன்.

மக்களை ஆடு மாடுகளை அடைத்து வைத்திருப்பது போல் முதல்வர் ஸ்டாலினுக்காக சேலத்தில் அடைத்து வைத்திருக்கிறார்கள். இவர்களுக்கு ரூ 2000, பிரியாணி பாக்கெட் கொடுக்கிறார்கள்.

இதில் எனக்கு மகிழ்ச்சிதான். கொள்ளையடித்து வைத்த பணத்தில் மக்களுக்கு ரூ. 2000 கொடுக்கிறார்கள். நான் வந்ததால் இந்த பணம் கிடைத்தது. அது போல் இரு வேளையும் பிரியாணி வாங்கித் தருகிறார்கள். நன்றாக வயிறார சாப்பிடட்டும். ஆனால் ஓட்ட மட்டும் தென்னரசுவுக்கு போட்டு விடுங்கள்.

இந்த தேர்தலுக்காக எல்லா அமைச்சர்களும் முகாமிட்டுள்ளார்கள். இதற்கு முன்பு கூட இதே போல் முகாமிட்டிருந்தால் ஈரோடு கிழக்கு பகுதி மக்கள் ஏன் இப்படி அடிப்படை திட்டங்கள் கூட இல்லாமல் கஷ்டப்பட போகிறார்கள்.

25 அமைச்சர்கள் ஆளுக்கு ஒரு திட்டத்தை நிறைவேற்றியிருந்தால் கூட இந்த மக்கள் நன்றாக இருந்திருப்பார்கள். அதிமுகவை நேரடியக எதிர்க்க திமுகவுக்கு தைரியம் இல்லை. அதிமுக ஆட்சிதான் பொற்கால ஆட்சி.

ஈரோட்டில் அதிமுக ஆட்சியில் ரூ 454 கோடி செலவில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

பாஜக முக்கியப் புள்ளி படுகொலை… நள்ளிரவில் பின்தொடர்ந்த கும்பல் வெறிச்செயல்!

புதுச்சேரி கருவடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 40 வயதான உமாசங்கர் புதுச்சேரி மாலிந இளைஞரணித் துணைத் தலைவராக உள்ளார். கடநத் ஒரு…

2 minutes ago

நயன்தாரா இப்படிலாம் செய்வாங்கனு எதிர்பார்க்கல- உண்மையை போட்டுடைத்த சுந்தர் சி!

மூக்குத்தி அம்மன் 2 “கேங்கர்ஸ்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சுந்தர் சி “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தை இயக்கி…

6 minutes ago

கணவர் வீட்டை விட்டு போக முடியாது : புதுச்சேரியை விட்டு செல்ல மறுக்கும் பாக்., பெண்!

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் பஃவ்சியா பானு, (39). இவர், உறவினரான புதுச்சேரி, லாஸ்பேட்டையை சேர்ந்த ஹனிப்கான் (43) என்பவரை, கடந்த…

32 minutes ago

தேர்தல் நேரத்தில் ரூ.11 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்.. திமுக எம்பிக்கு கோர்ட் பரபர உத்தரவு!

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் வேலூர் தொகுதியில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் சார்பாக…

1 hour ago

நடிகர் ஆர்யா மீது பிரபல நடிகை பரபரப்பு புகார்.. காசு வாங்கும் போது தெரியலையோ?

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒரு நாயகன். கதைக்காக உடல்களை வருத்தி நடித்து பெயர்…

1 hour ago

இளையராஜா செஞ்சது சரியா?- கெத்து தினேஷுக்கு இவ்வளவு கெத்தா? என்னப்பா இது?

இழப்பீடு கேட்டு நோட்டீஸ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல காட்சிகளில் தமிழ்…

1 hour ago

This website uses cookies.